Thursday, July 23, 2015


மோடியுடன் வைகோ சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடியுடன் வைகோ சந்திப்பு 20 தமிழர்கள் படுகொலைக்கு நீதி வேண்டும்; நிலம் கையகப்படுத்துதல் மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் தென்னக நதிகள் இணைப்பு வைகோ கோரிக்கை

Tuesday, July 21, 2015

தி.மு. கழகம் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு

தமிழ்நாட்டில் தற்போது மதுவிலக்கு இல்லாத காரணத்தால் - ஏழையெளிய விவசாயப் பெருங்குடி மக்கள், தொழிலாளத் தோழர்கள், ஏன், மாணவர்களும் கூட தொடர்ந்து , மனம் போன போக்கில் மதுவை அருந்தி, நூற்றுக்கணக்கில் உயிர்ப்பலி ஆகிறார்கள்.


இந்தக் கொடுமைக்கும், கொடூரப் பழக்கத்திற்கும் ஆண்கள் மட்டுமன்றி தாய்மார்களும், பச்சிளம் குழந்தைகளும் பலி ஆகிறார்கள் என்ற செய்திகளும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

மீண்டும் மதுவிலக்கு சட்டத்தை நடைமுறைப் படுத்தினால் என்ன என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. எனவே தி.மு. கழகம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சமுதாய மாற்றத்திற்கும், ஏற்றத்திற்கும் வழி வகுக்கும் வகையில் மதுவிலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு தலைவர் கருணாநிதி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Sunday, July 19, 2015

சூரிய ஒளி மின்சாரம் கொள்முதல் ஏன்? வைகோ

அதானி குழுமத்திடமிருந்து அதிக விலைக்கு 
சூரிய ஒளி மின்சாரம் கொள்முதல் ஏன்?
முதல்வர் விளக்கம் கூறுவாரா?
வைகோ அறிக்கை

இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில், 4530 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 648 மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி மின்சக்தி திட்டத்திற்காக, குஜராத்தை சேர்ந்த அதானி குழுமத்துடன் ஜூலை 4 ஆம் தேதி தமிழக மின்சாரவாரியம் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்த திட்டம்தான் உலகிலேயே ஒரே இடத்தில் அமையவுள்ள மிகப்பெரிய சூரிய மின்சக்தித் திட்டம் என்று அதானி குழுமம் கூறி இருக்கிறது. அதானி குழுமம் உற்பத்தி செய்யும் சூரிய ஒளி மின்சரம் ஒரு யூனிட், 7 ரூபாய் ஒரு காசுக்கு கொள்முதல் செய்திட, தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் 25 ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டைப் போல, மத்திய பிரதேச மாநில அரசும், 300 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டத்திற்கான ஒப்பந்தப் புள்ளிகளை கோரியதையடுத்து, பல நிறுவனங்கள் ஒப்பந்தப் புள்ளிகளை அளித்துள்ளன. ஜூலை 17 ஆம் தேதி இந்த ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்பட்டபோது, மொரீசியஸ் நாட்டின் ஸ்கை பவர் சௌத் ஈஸ்ட் ஆசியா கோல்டிங் லிமிடெட் நிறுவனம் ஒரு யூனிட் 5 ரூபாய் 5 காசுகள் என்று 25 ஆண்டுகளுக்கு சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்து வழங்க ஒப்புக்கொண்டது. அதானி குழுமம், 6 ரூபாய் 4 காசுக்கு விற்பனை செய்ய தயாராக இருப்பதாக ஒப்பந்தப்புள்ளி அளித்திருக்கிறது.

மத்திய பிரதேசத்தில், சூரிய மின்சாரத்தை 25 ஆண்டுகளுக்கு, ஒரு யூனிட் 6 ரூபாய் 4 காசுக்கு விற்பனை செய்திட ஒப்பந்தப்புள்ளி அளித்துள்ள அதானி குழுமத்திடமிருந்து, தமிழக அரசு 7 ரூபாய் ஒரு காசுக்கு கொள்முதல் செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது ஏன்? என்று கேள்வி எழுகிறது. தமிழக அரசு அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்வதால் தமிழக மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகத்திற்கு ஒரு நாளைக்கு 7.76 கோடி ரூபாய் நட்டம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதனால் ஒரு ஆண்டுக்கு சுமார் 2800 கோடி ரூபாய் தமிழக மின்சார வாரியம் நட்டத்தை சந்திக்கும் நிலைமை உருவாகும்.

தமிழக மின்சார வாரியம் ஏற்கனவே ஏற்பட்டுள்ள 58,000 கோடி ரூபாய் நட்டத்தை ஈடு கட்ட முடியாமல், மின் கட்டணத்தை உயர்த்தி தமிழக மக்கள் மீது சுமையை ஏற்றி இருக்கிறது. இந்நிலையில் அதானி குழுமத்திடம் அதிக விலை கொடுத்து சூரிய மின்சாரம் கொள்முதல் செய்ய ஜெயலலிதா அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது ஏன்?


அதானி குழுமத்தின் அசுர வளர்ச்சிக்கு குஜராத் மாநிலத்தில் மோடி அரசு உறுதுணையாக இருந்தது. 2002 இல் மோடி, குஜராத் மாநில முதல்வர் பொறுப்பை ஏற்றபோது, அதானி குழுமத்தின் வணிக மதிப்பு 3741 கோடி ரூபாய். 2014 இல் 75,659 கோடி ரூபாய் அளவுக்கு 20 மடங்கு வளர்ச்சி அடைந்தது. மோடி பிரதமராக பொறுப்புக்கு வந்த பிறகும் அதானி குழுமத்தின் வளர்ச்சியில் அக்கறை செலுத்துகிறார் என்பதற்கு மோடியின் ஆஸ்திரேலியா பயணம் உணர்த்தியது.

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா நாட்டில் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடி, அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானியையும் உடன் அழைத்துச் சென்றார். ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்தில் உள்ள கார்மைக்கேல் நிலக்கரி சுரங்கத்தை அதானி குழுமத்திற்கு வாங்கி தருவதற்கு பிரதமர் மோடி, தாமே முன்னின்று பேச்சுவார்த்தை நடத்தினார். அதுமட்டுமின்றி பாரத ஸ்டேட் வங்கி மூலம் 6200 கோடி ரூபாய், அதானி குழுமத்திற்கு கடன் வழங்கவும் மோடி அரசு நிர்பந்தம் கொடுத்தது என்று செய்திகள் வந்தன.

மோடியை பின்பற்றி ஜெயலலிதா அரசும் அதானி குழுமத்திற்கு சலுகைகள் காட்டுவது ஏன் என்று தெரியவில்லை. முதலமைச்சர் ஜெயலலிதாதான் இதற்கு உரிய விளக்கத்தை, நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

தமிழக அரசு செயல்படாத அரசு - தமிழிசை குற்றச்சாட்டு


தமிழக அரசு செயல்படாத அரசாக உள்ளது  துறைகளிலும் ஊழல்  வருகிறது தமிழக  அமைச்சர்கள்  இதற்கு பதில் கூறுவதாக இல்லை அதானி மின்சார ஒப்பந்தம் உணமையிலேயே நேரடியாக டெண்டர் விடப்பட்டு தான் தேர்ந்து எடுக்க பட்டு இருக்க வேண்டும் .

மேலும் மின்சார துறையிலும் ஊழல  வருகிறது யார் யார் ஒப்பந்தத்திற்கு வந்தார்கள் யார் யார் குறைவான மதிபிட்டில் கொடுத்து இருந்தார்கள் என்று தெளிவான  அரசு தமிழக மக்களுக்கு 
கொடுக்க வேண்டும் மேலும் கேரளா அரசு தமிழக காய்கறிகள் பூச்சி கொல்லி தன்மை அதிகமாக உள்ளது என  தெரிவித்து உள்ளது தமிழக அரசு விவசாயிக்கு கை கொடுக்கும் அளவுக்கு பரிசோதனை செய்து விவசாயிக்கு உதவி செய்து இருக்க வேண்டும் என தெரிவித்தார்

Saturday, July 18, 2015

காதலர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் காதல் கிராமம்

பேரத்தை துவங்கியது மூ.மு.க


திருச்சியில் அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நிறுவன தலைவர் டாக்டர் சேதுராமன் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில், சாதிவாரி கணக்கெடுப்பு பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதைதொடர்ந்து, மூ.மு.க., தலைவர் டாக்டர் சேதுராமன் கூறியபோது, 'நாங்கள் அதிமுக கூட்டணியில் தான் இருக்கிறோம். ஆனால் அதன் தலைமை எங்களை கண்டு கொள்வதில்லை. வரும் சட்டமன்ற தேர்தலில் அதிக சீட்டுக்கள் ஒதுக்குபவர்களுடன் கூட்டணி அமைப்போம்' என்றார்.

போலி குடிநீர் நிறுவனத்துக்கு அபராதம்

போலி குடிநீர் நிறுவனத்துக்கு அபராதம் 

காஞ்சீபுரம் மாவட்டம், செவிலிமேடு கிராமத்தில் கோகுல் அக்வா ஃபுட் புராடக்ட் நிறுவனம், போலியான ஐ.எஸ்.ஐ. முத்திரையை குடிநீர் கேன்களில் ஒட்டி விற்பனை செய்து வருவதாக வந்த ரகசிய தகவலையடுத்து, இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனமான பி.ஐ.எஸ். அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது 20 லிட்டர் பெட் பாட்டில்களில் அக்வா பிரைட் என்ற வணிகப் பெயரில் வேறு ஒரு நிறுவனத்திற்கு சொந்தமான ஐ.எஸ்.ஐ. தரச் சான்றிதழ் எண்ணை சட்ட விரோதமாக இந்த நிறுவனம் பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது. இதையொட்டி அந்த குடிநீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஐ.எஸ்.ஐ. முத்திரையை தவறாக பயன்படுத்திய நிறுவனம் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த குற்றத்திற்கு ஒரு வருட சிறை தண்டனை அல்லது ரூ. 50000 அபராதம் அல்லது இவை இரண்டும் பி.ஐ.எஸ். சட்டம் 1986ன் படி தண்டனை விதிக்கப்படும்.
ஐ.எஸ்.ஐ. தர முத்திரையை தவறாக பயன்படுத்துபவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் பற்றிய தகவல்களை பொதுமக்கள் பி.ஐ.எஸ். நிறுவனத்திற்கு 044-22542168 என்ற தொலைபேசி எண்ணிற்கோ அல்லது sro@bis.org என்ற இமெயில் முகவரிக்கோ தெரிவிக்கலாம். அவர்கள் பெயர் மற்றும் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று பி.ஐ.எஸ். நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

ஒரு லட்சம் கோடி நஷ்டத்திற்கு அமைச்சரின் பதில் என்ன?

மின் வாரியத்தில் ஒரு லட்சம் கோடி நஷ்டத்திற்கு அமைச்சரின் பதில் என்ன?
திமுக பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் கேள்வி





தமிழகம் ஒளிருகிறது என்று அ.தி.மு.க. நினைக்கலாம். ஆனால் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கிக் கிடக்கிறது என்பது தான் உண்மை. அனலடிக்கும் கோடையில் அறிவிக்கப்படாத மின் வெட்டால் கன்னியாகுமரி முதல் சென்னை வரை உள்ள மக்கள் பெரும் துயரத்திற்கு உள்ளாகியுள்ளார்கள். சமீபத்தில் மின் நிலைமை பற்றி அடுத்தடுத்து மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். முதல் அறிக்கையிலும் சரி, தற்போது தலைவர் கலைஞருக்கு பதில் அளிக்கிறேன் என்று அநாகரீகமாக வெளியிட்டுள்ள இரண்டாவது அறிக்கையிலும் “2011ல் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு துவங்கப்பட்ட புதிய மின் திட்டங்கள் மூலம் ஒரு மெகாவாட் மின்சாரம் கூட உற்பத்தி செய்யப்படவில்லை” என்ற உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார். அது மட்டுமின்றி, அ.தி.மு.க. ஆட்சியில் துவங்கப்பட்ட புதிய மின்திட்டங்கள் பற்றியோ, அதன் மூலம் எத்தனை மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது என்பது பற்றியோ ஏதும் குறிப்பிடவும் இல்லை. அதிக விலை கொடுத்து மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவதையும் அமைச்சர் மறுக்கவில்லை. கழக அரசு துவங்கிய உடன்குடி மின்திட்டத்திலும் அ.தி.மு.க. அரசு ஏகப்பட்ட டெண்டர் குளறுபடிகளைச் செய்துள்ளதையும் மறுக்கவில்லை. அந்தத் திட்ட விவகாரம் இப்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது என்பதை ஏனோ அமைச்சர் தன் அறிக்கையில் மூடி மறைத்துள்ளார். அதே நேரத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் ஏன் புதிய மின் திட்டங்கள் துவங்கப்படவில்லை என்றோ, கழக ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்ட மின்திட்டங்கள் ஏன் விரைந்து முடிக்கப்படவில்லை என்பது பற்றியே அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் எந்த விளக்கமும் கூறவில்லை

. தேவைக்கு அதிகமான எண்ணிக்கையில் மின் மீட்டர்களை ஏன் வாங்கியது அ.தி.மு.க. அரசு என்பதற்கும் விளக்கம் ஏதுமில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக என்ன விலை கொடுத்து, எவ்வளவு புதிய மின் மீட்டர்கள் வாங்கப்பட்டன என்பதைக் குறிப்பிடாமல், எத்தனை எலெக்ட்ரோ மெக்கானிக் மீட்டர்கள் இதுவரை மாற்றப்பட்டுள்ளன என்பதை மட்டுமே மின்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆகவே தி.மு.க தலைவர் வெளியிட்ட அறிக்கைக்கு மறுப்பு அறிக்கை என்ற போர்வையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என்பதன் ஒப்புதல் வாக்குமூலம் தான் அமைச்சரின் இரு அறிக்கைகள்! சூரிய ஒளி மின்சாரம் ஒரு யூனிட் 3.50 ரூபாய்க்கும், மின்சாரம் ஒரு யூனிட் 4 ரூபாய்க்கும் கிடைக்கும் போது அதானி குழுமத்திடமிருந்து ஒரு யூனிட் சூரிய ஒளி மின்சாரத்தை 7.01 ரூபாய் கொடுத்து வாங்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஏன் திட்டமிடுகிறது என்ற கேள்விக்கும் அமைச்சரிடமிருந்து
பதில் இல்லை. “ஏன் அதிக விலை கொடுத்து மின்சாரம் கொள்முதல் செய்தீர்கள்” என்று தலைவர் கலைஞர் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் “வெற்று அறிக்கை”களை விட்டு மின்துறை அமைச்சர் தன் பொறுப்பினை தட்டிக் கழிக்க முடியாது என்பதை அவர் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். "கரெப்ஷன்" "கமிஷன்" கலாச்சாரத்திற்கு விடை கொடுத்து விட்டு அமைச்சர் பணியாற்றியிருந்தாலே, இந்த மின்திட்டங்கள் எல்லாம் உரிய காலத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கும் என்பதே மின்துறை அமைச்சர் ஏனோ இன்னும் புரிந்து கொள்ள மறுக்கிறாரா அல்லது புரிந்து கொண்டும் புரியாதது போல் நடிக்கிறாரா என்று தான் கேள்வி எழுப்ப வேண்டியதிருக்கிறது. ஆகவே, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள பொது நல வழக்கில் எழுப்பப்பட்டுள்ள முறைகேடு புகார்களுக்கும், ஏன் அதிக விலைக்கு மின்சாரத்தை கொள்முதல் செய்கிறது அ.தி.மு.க. அரசு என்பதற்கும் அமைச்சர் பொறுப்பேற்றுத்தான் ஆக வேண்டும். மோசமான நிர்வாகம் மற்றும் முறைகேடுகளால் கடந்த நான்கு வருடங்களில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது அ.தி.மு.க. அரசு. இந்நிலையில் நான் மின் துறை அமைச்சரைப் பார்த்து மூன்றே மூன்று கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன்.

1) புதிய மின்திட்டங்கள் மற்றும் ஏற்கனவே கழக ஆட்சியில் துவங்கப்பட்ட மின் திட்டங்களை விரைந்து முடிப்பது பற்றி எத்தனை முறை மின்வாரியப் பொறியாளர்கள் மற்றும் துறை அதிகாரிகளுடன் அமைச்சர் என்ற முறையில் ஆலோசனை நடத்தியிருக்கிறீர்கள்? அல்லது அதிகாரிகளுடன் ஆய்வு செய்திருக்கிறீர்கள்?
2) தன் பதவிக்காலத்தில் இதுவரை எத்தனை முறை அதிமுக அரசின் புதிய மின்திட்டங்கள் நடைபெறுவதாக சொல்லப்படும் இடத்திற்கோ, அல்லது ஏற்கனவே கழக ஆட்சியில் துவங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வரும் மின்திட்டங்கள் உள்ள இடத்திற்கோ அமைச்சர் என்ற முறையில் சென்று ஆய்வு நடத்தியிருக்கிறீர்கள்?
3) தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தை ஒரு லட்சம் கோடி ரூபாய் நஷ்டத்தில் மூழ்க விட்டது ஏன்? இந்த கேள்விகளுக்கு எல்லாம் அமைச்சர் பதில் சொல்கிறாரோ இல்லையோ அ.தி.மு.க. ஆட்சியின் கையாலாகாத தனத்தாலும், நிர்வாக திறமையின்மையாலும் தமிழகம் மின் பற்றாக்குறையிலும், மின்வெட்டிலும் சிக்கித் தவிக்கிறது என்பது தான் உண்மை. ஆகவே தமிழக மக்கள் காதுகளில் "பூ சுற்று" முயற்சிக்காமல், கழக அரசில் துவங்கப்பட்ட மின் திட்டங்களை விரைவுபடுத்தி, ஏற்கனவே முடிக்கப்பட்ட மின் திட்டங்களில் இருந்து மின்சார உற்பத்தியைத் தொடங்கி தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறை மற்றும் மின்
வெட்டை உடனே நீக்குவதற்கு மின் துறை அமைச்சர் பணியாற்ற வேண்டும், அதனை "மக்களுக்காகவே நான்" என்று கூறும் முதலமைச்சர் உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

விஜயகாந்த் கல்லூரி நிர்வாகிகள் மீது புகார்



விஜயகாந்த் கல்லூரி நிர்வாகிகள் மீது புகார் ஆள் வைத்து தாக்கியதாக துணைபேராசிரியர் குற்றச்சாட்டி உள்ளார்.


ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியில் துணைபேராசிரியராக பணியாற்றியவர் விக்ரம். இவர் காஞ்சிபுரம் மாவட்டம் மாமண்டூர் காவல்நிலையத்தில் அளித்துள்ள புகாரில், கல்லூரி நிர்வாகம் பல மாதங்களாக சம்பளம் தரவில்லை என்றும் பனிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களை கல்லூரியில் சேர்த்துவிட தன்னை போன்ற ஆசிரியர்களை கட்டாயப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். இந்த செயலை கண்டித்து தான் கல்லூரியில் துண்டு பிரசரம் விநியோகம் செய்யதாகவும், இதனால் ஆத்திரம் அடைந்த கல்லூரி தலைவர் மற்றும் நிர்வாக அதிகாரி தன்னை மிரட்டியதாகவும் கூறியுள்ளார். கடந்த 15-ம் தேதி கல்லூரி அருகே இருந்த போது 5 பேர் கொண்ட கும்பல் தன்னை தாக்கியதாகவும், ஆண்டாள் அழகர் கல்லூரிக்கு எதிராக பேசக்கூடாது என்று மிரட்டி விட்டு சென்றாகவும் அந்த புகார் மனுவில் விக்ரம் தெரிவித்துள்ளார்.