Saturday, October 11, 2008

லெப். மாலதியின் 21 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு

உக்கிரமான மோதல் நடைபெறும் பகுதியில் 2 ஆம் லெப். மாலதியின் 21 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு

சிறிலங்கா படையினரின் உக்கிரமான தாக்குதல்கள் நடைபெற்று வரும் பகுதியிலிருந்து மூன்று கிலோ மீற்றர் தொலைவில் உள்ள இரணைமடுச் சந்தியில் 2 ஆம் லெப். மாலதியின் 21 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்று நடைபெற்றது.

கிளிநொச்சி இரணைமடுச் சந்தியில் இன்று வெள்ளிக்கிழமை 2 ஆம் லெப். மாலதியின் 21 ஆம்அண்டு நினைவு நிகழ்வு நடைபெற்றது.

பாரதிபுரம் வட்டப் பொறுப்பாளர் திருமாறன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழீழ மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.தமிழினி பேசியதாவது:

மாலதியின் திருவுருவச்சிலை 2004 ஆம் ஆண்டு இதே நாளில் மகளிர் படையணிகளின் அணிவகுப்புடன் பேரெழுச்சியான நிகழ்வுடன் திறந்து வைக்கப்பட்டது.


[படம்: புதினம்]


[படம்: புதினம்]


[படம்: புதினம்]

கிளிநொச்சி மண்ணை கைப்பற்றி விடுவோம் என்று சிங்களப் பேரினவாதிகள் கொக்கரித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்நிகழ்வை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றோம்.

தமிழீழ பெண்களுக்கு நம்பிக்கை என்ற பெரும் ஆயுதத்தை மாலதி விதைத்து விட்டுச் சென்றிருக்கிறார். இந்தியப் படைகளுடன் மோதல்கள் தொடங்கிய போது எம்மிடம் கனரக போர்க்கலங்கள் இல்லை. இருந்தவையெல்லாம் நம்பிக்கை மட்டுமே.

போராளிகளிடம் இருந்த நம்பிக்கையும், மன உறுதியும், ஓர்மமும் அர்ப்பணிப்புமே பெரும் வல்லரசை வெல்லக் கூடிய நிலையை உருவாக்கியது.

மாலதி முதல் பெண் மாவீரராக வித்தாகியுள்ளமையால் மாலதியின் வழியில் தமிழீழப் பெண்கள் அணிவகுத்துள்ளனர் என்றார் தமிழினி.


[படம்: புதினம்]


[படம்: புதினம்]


[படம்: புதினம்]

முன்னதாக பொதுச்சுடரினை கிளிநொச்சி கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் கலைவாணன் ஏற்றினார். தமிழீழத் தேசியக் கொடியினை ராதா வான்காப்புப் படையணியின் அரசியல் பொறுப்பாளர் விழியன் ஏற்றினார்.

2 ஆம் லெப். மாலதியின் திருவுருவச்சிலைக்கான ஈகைச்சுடரினை புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர்களில் ஒருவரான நாவேந்தன் ஏற்றி மலர்மாலை சூட்டினார்.

புலனாய்வுத்துறை பொறுப்பாளர்களில் ஒருவரான கானகன்

கிளிநொச்சிக் கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் கலைவாணன்

மாவீரர் பணிமனை நிர்வாகப் பொறுப்பாளர் இனியவன்

மாவீவரர்; பணிமனை மகளிர் பொறுப்பாளர் ஆவர்த்தனா

உதயநகர் வட்டப் பொறுப்பாளர் ஜூட்

தமிழீழ மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.தமிழினி ஆகியோர் மலர்மாலைகளை சூட்டினர்.

இந்நிகழ்வில் பெருமளவு மக்கள் மற்றும் போராளிகள் கலந்து கொண்டனர்.


[படம்: புதினம்]


[படம்: புதினம்]


[படம்: புதினம்]