Tuesday, February 02, 2016

new

users online

மியான்மரில் புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடர்தொடங்கியது

மியான்மரில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயக லீக் (என்.எல்.டி) 

பெரும்பான்மை பெற்ற புதிய நாடாளுமன்ற கூட்டத் தொடர் பிப்ரவரி முதல் 

தேதி தொடங்கியது.

இதன் மூலம் ராணுவம் மட்டுமே ஆட்சி செய்யும் நடைமுறை முடிவுக்கு 

வந்துள்ளது.

மியான்மரில் கடந்த 1962-ல் ஆட்சியை ராணுவம் கைப்பற்றி யது. சுமார் 

50 ஆண்டுகால சர்வாதி கார ஆட்சிக்குப் பிறகு 2011-ல் ஜனநாயகத்தை 

நோக்கி மியான்மர் திரும்பத் தொடங்கியது. இந் நிலையில் கடந்த நவம்பர் 

மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜன 

நாயக லீக் 80 சதவீத இடங்களை கைப்பற்றியது. இதன் மூலம் அரசு 

அமைக்கும் தகுதியை அக்கட்சி பெற்றது.

இந்நிலையில் அக்கட்சி பெரும் பான்மை பெற்ற நாடாளுமன்றம் நேற்று 

முதல் அதிகாரப்பூர்வமாக செயல்படத் தொடங்கியது.

மியான்மரின் தற்போதைய அதிபர் தெய்ன் செய்ன் வரும் மார்ச் இறுதியில் 

பதவி விலகுவார் என்று தெரிகிறது. அதன் பிறகே தேசிய ஜனநாயக லீக் 

ஆட்சிப் பொறுப்பேற்கும்.

என்றாலும் நாடாளுமன்றத்தில் 25 சதவீத இடங்கள் ராணுவத்துக்கு 

ஒதுக்கப்பட்டுள்ளதாலும், பாது காப்பு, உள்துறை, எல்லை விவகாரங்கள் 

உள்ளிட்ட முக்கிய துறைகள் ராணுவத்தின் வசமே இருக்கும் என்பதாலும் 

ஆட்சியில் ராணுவத்தின் கட்டுப்பாடுகள் தொடரும்.

புதிய நாடாளுமன்றத்தின் தொடக்கப் பணிகளில், புதிய அதிபரை தேர்வு 

செய்யும் பணியும் ஒன்றாகும். இந்நிலையில் சூச்சியின் மகன்கள் பிரிட்டன் 

குடியுரிமை பெற்றவர்கள் என்பதால், அரசியல் சாசனப்படி சூச்சி அதிபராக 

பதவியேற்க இயலாது. என்றாலும் அவர் திரைமறைவில் இருந்து ஆட்சி 

நடத்துவார் என்று தெரிகிறது.

ஆட்சி மாற்றம் சுமுகமாக நடைபெறுவதற்காக ராணுவ உயரதிகாரிகளை 

சூச்சி சந்தித்து பேசியுள்ளார். இதில் தாங்கள் தலையிடப் போவதில்லை 

ராணுவ அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.
=
பெட்ரோல் லிட்டருக்கு 4 பைசா விலை குறைப்பு

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு காரண மாக பெட்ரோல் 

விலை லிட்டருக்கு 4 பைசாவும், டீசல் லிட்டருக்கு 3 பைசாவும் 

குறைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப 

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 4 

டாலர் வரை விலை குறைந்துள்ளது. இதையடுத்து, பெட்ரோல் லிட்டர் 

ஒன்றுக்கு ஒரு ரூபாய் 4 பைசாவும், டீசல் ஒரு ரூபாய் 53 பைசாவும் 

குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டர் ஒன்றுக்கு 

ஒரு ரூபாயும், டீசலுக்கு ரூ.1.50-ம் உயர்த்திவிட்டது. இதன் காரணமாக, 

எண்ணெய் நிறுவனங்கள் பெயர் அளவுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் 4 

பைசாவும், டீசல் 3 பைசாவும் குறைத்துள்ளது. இந்த விலைக் குறைப்பு 

ஜனவரி 31 நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகளவில் குறைந்தும் 

மத்திய அரசின் கலால் வரி விதிப்பு காரணமாக அவற்றின் முழு பயனை 

வாகன ஓட்டிகளால் முழுமையாக அனுபவிக்க முடியாததால் அவர்கள் 

மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
=
இளைஞர்களுக்கான புதிய வீட்டுக் கடன் திட்டம்
இளைஞர்களுக்கான புதிய வீட்டுக் கடன் திட்டத்தை பாரத ஸ்டேட் வங்கி 

அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, பேசிய அவ்வங்கியின் தலைமை பொதுமேலாளர் பி.ரமேஷ் 

பாபு, பாரத ஸ்டேட் வங்கி இளைஞர்களுக்கு உதவும் வகையில் ‘எஸ்பிஐ 

ப்ளக்ஸி பே’ என்ற வீட்டுக் கடன் திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளது. 

இதன்படி, 21 முதல் 45 வயதுக்குள் இருப்பவர்களுக்கு குறைந்தபட்சமாக 

ரூ.20 லட்சம் கடன் வழங்கப்படும். பெண்களுக்கு 9.50 சதவீதமும், 

ஆண்களுக்கு 9.55 சதவீதமும் வட்டி வசூலிக்கப்படும். இக்கடன் பெறுபவர்கள் 

முதல் ஐந்தாண்டுகளுக்கு வட்டி மட்டும் செலுத்தினால் போதும். அதற்கடுத்த 

3 ஆண்டுகளுக்கு வட்டி மற்றும் அசல் தொகையை செலுத்த வேண்டும். 

அதற்கடுத்த 3 ஆண்டுகளுக்கு கடன் மற்றும் அசல் தொகையுடன் கூடுதலாக 

5 சதவீதம் கடன் தவணை தொகையை சேர்த்து செலுத்த வேண்டும் என்று 

கூறினார்.

மேலும், இக்கடன் தொகையை திரும்ப செலுத்த 25 முதல் 30 ஆண்டுகள் 

என கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனினும் அதற்கு முன்பாகக் கூட 

கடன் தொகையை முழுமையாக செலுத்தலாம் என்றும், இக்கடன் திட்டம் 

குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.sbi.co.in என்ற இணையதளம் 

மூலம் தெரிந்து கொள்ளலாம் என்றும் ரமேஷ் பாபு கூறினார்.
=
திருப்பூரில் 1-ம் வகுப்பு மாணவன் பள்ளியில் கொலை

கடந்த ஜன.27-ம் தேதி காலை 7.40 மணிக்கு பள்ளி வேனில் மகனை 

அனுப்பி வைத்தோம். அடுத்த ஒரு மணி நேரத்தில் ’உங்கள் மகன் கீழே 

விழுந்து காயம் அடைந்து விட்டார்’ என பள்ளித் தரப்பில் இருந்து போன் 

வந்தது. பள்ளிக்குச் சென்று பார்த்தபோது, தனியார் மருத்துவ மனைக்கு 

அழைத்துச் சென்றுவிட்ட தாகத் தெரிவித்தனர். அதன் பின், அந்த 

மருத்துவமனைக்குச் சென்ற போது, மகன் அங்கு இல்லை. அரசு 

மருத்துவமனைக்கு கொண்டு சென்று விட்டதாக தகவல் அளித்தனர். அங்கு 

பரிசோதித்த மருத்துவர், எனது மகன் இறந்துவிட்டதாகத் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பாக என் மனைவி, ஆசிரியையை தொடர்பு கொண்ட போது, 

உரிய பதில் அளிக்கவில்லை. ஆசிரியர்கள் முன்கூட்டியே கவனித் திருந்தால் 

இதுபோன்ற ஒரு துயரச் சம்பவமே நிகழ்ந்திருக்காது. யாரிடமும் அதிர்ந்து 

பேசாத எனது மகனை இழந்துவிட்டு பெரும் துயரத்தில் வாழ்கிறோம்.

6 வயது சிறுவனை தாக்கிய, 12-வயது மாணவர் ‘பார்டர் லைன் 

டிஸ்ஆர்டரால்’ பாதிக்கப்பட்டவராக இருக்கலாம். ஒரு சிறிய அவமான 

வார்த்தை கூட, அவர்களது மனதை பெரிய அளவில் பாதிக்கச் செய்யும். 

‘தான்’ என்ற எண்ணம் அவர்கள் மனதில் எப்போதும் இருந்துகொண்டே 

இருக்கும். ஒரு குழந்தை மட்டும் இருக்கும் வீடுகளில், நிச்சயம் இந்த பாதிப்பு 

இருக்கும்.

‘தன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது’ என்ற எண்ணம் ஒவ்வொரு 

செயல்பாட்டிலும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். குழந்தையின் 3 

வயதில் தொடங்கி 5 வயது வரை இந்த எண்ணம் வளர்ந்து கொண்டே போய் 

7 வயதில் ‘பர்சனாலிட்டி டிஸ்ஆர்டராக’ மாறும்.

அதுபோன்ற சூழலில், வளரும் குழந்தைகளை பெற்றோர் அவர்களுக்கு புரிய 

வைக்க வேண்டும். வன்முறை நிறைந்த வீடியோ கேம்ஸ்களை குழந்தை கள் 

விளையாட அனுமதிக்கக் கூடாது. இன்றைக்கு பெரும்பாலான வீடுகளில் 

தாய், தந்தை இருவருமே வேலைக்குச் செல்பவர்களாக இருக்கிறார்கள். 

இப்படி வளரும் குழந்தைகள், சின்ன விஷயங்களுக் குக்கூட எளிதில் கோபம் 

அடையும், அழத் தொடங் கும். குழந்தை செய்வதெல்லாம் சரி என்ற எண் 

ணம் கூடாது. அடித்தால், அவனுக்கும் வலிக்கும், உனக்கும் வலிக்கும் 

என்பதை புரிய வைக்க வேண்டும். மதிய உணவைக் கூட, அனைவரும் 

பகிர்ந்து சாப்பிட வேண்டும். குழந்தைகள் குழுவாக விளையாடும்போது, 

வெற்றி தோல்வி பெறும்போது இதை உணர்வார்கள். வீடு மற்றும் 

சுற்றுப்புறங்களில் பகிர்தல் மற்றும் கூடி விளையாடுதலை பெற்றோர் 

கற்றுத்தர வேண்டும். அனைத்துப் பெற்றோரும் குழந்தைகள் நன்றாகப் 

படிக்கிறார்களா என்று பார்க்கிறார்கள். மாறாக, நற்பண்புகளுடன் 

வளர்கிறார்களா என்று பார்ப்பதில்லை.

வாரம் ஒரு நாளாவது, குழந்தைகளுடன் பேசி, மகிழ்ந்து அவர்களுடன் நேரம் 

செலவழிக்க பெற்றோர் முன்வர வேண்டும் என்றார்.
=
நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு ரூ.1.41 கோடி

பிரதமர் நரேந்திர மோடியின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ரூ.1.41 

கோடியாக உள்ளது. இதில் 13 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய அசையா 

சொத்தின் மதிப்பு மட்டும் 25 மடங்கு அதிகரித்து ரூ.1 கோடியாகி உள்ளது.

மோடி 2014-ம் ஆண்டு மே 26-ம் தேதி பிரதமராக பொறுப்பேற்றுக் 

கொண்டார். கடந்த நிதியாண்டின் இறுதி (31-3-2015) நிலவரப்படி 

மோடியின் சொத்து விவரங்களை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. 

இதன்படி 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ம் தேதி ரூ.1.26 கோடி யாக 

இருந்த மோடியின் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் ஒட்டுமொத்த 

மதிப்பு, 2015-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி ரூ.1.41 கோடியாக அதிகரித்தது. 

இதே காலத்தில் அவரிடமிருந்த ரொக்க தொகை ரூ.38,700-லிருந்து 

ரூ.4,700 ஆகக் குறைந்தது.

மோடிக்கு சொந்தமாக மோட்டார் வாகனம், கார், விமானம், படகு, கப்பல் என 

எந்த ஒரு வாகனமும் இல்லை. அவரது பெயரில் குஜராத்தில் மட்டுமே 

வங்கிக் கணக்கு உள்ளது. டெல்லியில் இல்லை. மோடி பெயரில் கடன் 

எதுவும் இல்லை.

சுமார் 45 கிராம் எடை கொண்ட 4 தங்க மோதிரங்கள் உள்ளன. இதன் 

மதிப்பு ரூ.1.19 லட்சம் ஆகும். இதுதவிர எல் அன்ட் டி இன்ப்ரா பத்திரங்கள் 

(வரி சேமிப்பு), தேசிய சேமிப்பு சான்றிதழ்கள் (என்எஸ்சி), ஆயுள் காப்பீட்டு 

பாலிசிகள் உட்பட அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.41.15 லட்சமாக 

இருந்தது.அசையா சொத்தைப் பொறுத்த வரை, குஜராத் மாநிலம் காந்தி 

நகரில் உள்ள ஒரு குடியிருப்பு சொத்தில் 4-ல் ஒரு பங்கு உரிமை இவருக்கு 

உள்ளது.

இதில் 169.81 சதுர அடி கட்டிடத்தை உள்ளடக்கிய 3,531.45 சதுர அடி 

நிலம் இவரது பங்கு ஆகும். இந்த சொத்தை 2002-ம் ஆண்டு அக்டோபர் 

25-ம் தேதி ரூ.1,30,488-க்கு வாங்கி உள்ளார். இதன் இப்போதைய உத்தேச 

சந்தை மதிப்பு ரூ.1 கோடி என்று இதில் கூறப்பட்டுள்ளது.
=
“சேர்க்கையின்போதே தலித் மாணவர்களுக்கு விஷமும் தூக்குக் கயிறும் 

கொடுங்கள்” : ரோஹித் வெமுலா  பல்கலைக்கழக துணைவேந்தருக்கு 

எழுதிய கடிதம்
=
பூநாரைகளின் புகலிடமாகும் சென்னை!

மேற்கத்திய நடன வகைகளில் ‘ஃப்ளெமங்கோ' எனும் ஸ்பானிய நடனம் பிரசித்தி பெற்றது. லத்தீன் மொழியில் ‘ஃப்ளெம்மா' (flamma) என்று ஒரு சொல் இருக்கிறது. ‘பற்றி எரியும் தீ ஜுவாலை' என்பது இதன் பொருள்.

அந்தத் தீ ஜுவாலை காற்றில் எப்படி அசைந்தாடுகிறதோ, அப்படியான அசைவுகளில் இந்த நடன வகை இருக்கும் என்ற காரணத்தாலோ என்னவோ, லத்தீன் மொழியின் வேர் வார்த்தையை வைத்துக்கொண்டு ‘ஃப்ளெமங்கோ' என்ற சொல்லை ஸ்பானிய மக்கள் உருவாக்கினர்.

அதே வேர் வார்த்தையிலிருந்து தோன்றிய ஒரு பறவையின் பெயரும் இந்த நடன வகையின் பெயரை ஒத்திருக்கிறது. அது ‘ஃப்ளெமிங்கோ!'. அழகுத் தமிழில் அது ‘பூநாரை'. 'பூ' என்ற சொல்லுக்குச் சிவப்பு என்ற அர்த்தமும் உண்டு. பூநாரைகளின் உடலில் மெல்லிய சிவப்பு நிறம் தென்படுவதைப் பார்க்க முடியும்.

பற்றி எரியும் தீ ஜுவாலையின் சூடு எப்படியோ, அப்படித்தான் தற்போது இந்தப் பறவை மற்றும் இதன் வாழிடங்களைப் பாதுகாப்பது குறித்த விவாதங்களும் மிகவும் சூடாக நடந்துகொண்டுள்ளன!

கடந்த 26-ம் தேதி சென்னையில் ‘மெட்ராஸ் நேச்சுரலிஸ்ட்ஸ் சொசைட்டி' அமைப்பால் ஒன்பதாவது ஆண்டாக ‘பறவை பந்தயம்' நடத்தப்பட்டது. அதன் நிறைவு விழாவில் கலந்துகொண்டு பேசிய மும்பையைச் சார்ந்த சூழலியலாளர் சஞ்சய் மோங்கா ஒரு முக்கியமான விஷயத்தைக் குறிப்பிட்டார்.

‘காடுகளுக்கெல்லாம் இனிச் செல்லத் தேவையில்லை. இனிப் பறவைகளைச் சுலபமாகக் காண்பதற்குக் குப்பை மேடுகளேபோதும்!' என்பதே அது. அவர் அப்படிச் சொன்னதற்குக் காரணமிருக்கிறது.

மும்பையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ‘பூநாரைகள் திருவிழா' நடத்தப்பட்டு வருகிறது. பல வெளிநாடுகளிலிருந்து நாரைகள் ஆயிரக்கணக்கில் இந்தியாவுக்கு வலசை வருகின்றன. இவை வழக்கமாக டிசம்பர் முதல் மே மாதம்வரை தங்கியிருக்கின்றன.

80-களின் இறுதிவரைக்கும் ஒன்று அல்லது இரண்டு நாரைகள் வந்து செல்வதே அரிதாக இருந்தது. ஆனால், 90-கள் மற்றும் அதற்குப் பிந்தைய காலங்களில் இருநூறு, இரண்டாயிரம் என அதிகரிக்கத் தொடங்கிக் கடந்த ஆண்டு சுமார் 20 ஆயிரம் பூநாரைகள் மும்பைக்கு வலசை வந்து சேர்ந்தன.

“மும்பை தானே ஓடையின் சிறுகுடாவான ‘சூவ்ரி' என்ற இடத்தில் நிறைய சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளன. அவை வெப்பமான கழிவு நீரை ஓடையில் திறந்துவிடுகின்றன. அதன் காரணமாக ஓடை நீரில் நைட்ரேட், பாஸ்பேட் உள்ளிட்ட வேதிப்பொருட்களின் அளவு சமன்பட்டிருக்கும். இதனால் ‘பைட்டோப்ளாங்க்டன்' (மிதவை உயிரிகள்) தோன்றுகின்றன. இவைதான் நாரைகளின் முக்கியமான உணவு.

சுத்திகரிப்பு ஆலைகள் வருவதற்கு முன்பு சுத்தமாக இருந்த ஓடையில் நாரைகள் தென்படவில்லை. ஆனால் அந்த ஆலைகள் ஏற்படுத்தப்பட்ட பிறகு அவை வெளியிடும் மாசுபாட்டால்கூட, இப்படியொரு நன்மை ஏற்பட்டுள்ளது!” என்றார் சஞ்சய் மோங்கா.

இதைத் தொடர்ந்து அந்தப் பகுதியை ‘தானே ஓடை பூநாரை சரணாலயம்' என்று மகாராஷ்டிர அரசு அறிவித்தது. என்றாலும், பூநாரைகள் இங்கு வருவதற்கு மோங்கா சொல்லும் காரணம் அறிவியல்பூர்வமாகவும், அதிகாரப்பூர்வமாகவும் உறுதி செய்யப்படவில்லை என்று ‘பம்பாய் இயற்கை வரலாற்று கழக'த்தின் ‘இயற்கைக் கல்வி திட்ட' அலுவலர் அதுல் சாட்டே கூறுகிறார்.

சென்னையில் முதன்முதலில் பூநாரைகள் வரத் தொடங்கிய இடம் பள்ளிக்கரணை சதுப்பு நிலம். 2008-ம் ஆண்டில் பூநாரைகள் முதலில் வந்தன என்கிறார் ‘நேச்சர் ட்ரஸ்ட்' அமைப்பின் நிறுவனர் கே.வி.ஆர்.கே. திருநாரணன். அதன் பிறகு குறைந்த எண்ணிக்கையாக இருந்தாலும் ஒவ்வோர் ஆண்டும் பூநாரைகள் அங்குத் தென்பட்டுக் கொண்டுள்ளன.

கடந்த ஆண்டு பள்ளிக்கரணைக்கு அருகில் உள்ள, பள்ளிக்கரணை அளவுக்கு மாசுபடாத பெரும்பாக்கம் சதுப்பு நிலத்திலும் பெரிய பூநாரைகள் முதன்முறையாகத் தென்பட்டதாகக் கூறும் திருநாரணன், “இதற்கு முக்கியக் காரணம், அவற்றுக்குத் தேவையான உணவும் பாதுகாப்பும் கிடைப்பதுதான்” என்கிறார்.

கடந்த 2014-ம் ஆண்டு பெரும்பாக்கத்தின் 71.85 ஹெக்டேர் அளவு சதுப்பு நிலத்தை மாநில அரசு வனத்துறையிடம் ஒப்படைப்பதற்கான அரசாணையை வெளியிடப்பட்டது. இந்த நிலத்தில் எந்த வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளக் கூடாது என்பது விதி. ஆனால், இன்றுவரையிலும் அந்த இடத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் அளவை செய்து, நிலத்தைப் பிரித்துத் தரவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த இடங்களைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டுமென சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர். இந்நிலையில், பெரும்பாக்கம் சதுப்பு நிலத்தையொட்டி வளர்ச்சிப் பணிகளும் குப்பை கொட்டுவதும் அதிகரித்து வருவதாகப் புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன.

அப்படியானால், மும்பையைப் போலப் பின்னோக்கிச் செல்கிறதா சென்னை?
====
10 லட்சம் கையெழுத்துக்களை திரட்டும் முயற்சியில் முருகனின் தாயார்

ராஜிவ் கொலை வழக்கு கைதிகளை விடுதலை செய்யுமாறு கோருவதற்கு இலங்கையில் 10 லட்சம் கையெழுத்துக்களை திரட்டும் முயற்சியில் முருகனின் தாயார் ஈடுபட்டுள்ளார்.

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்ட நிலையில் சிறையில் உள்ள முருகன், நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யுமாறு கோருவதற்கு இலங்கையில் 10 லட்சம் கையெழுத்துக்களைத் திரட்டும் முயற்சியில் முருகனின் தாயார் வெற்றிவேல் சோமணி ஈடுபட்டிருக்கின்றார்.

கிளிநொச்சி மாவட்டம், பளை நகரில் செய்தியாளர்களிடம் திங்களன்று அவரே இந்தத் தகவலை வெளியிட்டிருக்கின்றார்.

25 ஆண்டுகளாக சிறையில் வாடும் தனது மகன் உள்ளிட்ட 7 பேரும் தங்களின் விடுதலைக்காக பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டிருந்த போதிலும், இந்திய அரசாங்கமோ அதிகாரிகளோ அவற்றை கவனத்தில் கொள்ளாதிருப்பதனால் அவர்கள் பெரிதும் கவலை அடைந்திருக்கின்றார்கள் என்று முருகனின் தாயார் சோமணி கூறினார்.

ஒரு நாட்டைச் சேர்ந்த ஒருவர் மற்றுமொரு நாட்டில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தால், சொந்த நாட்டு மக்கள் அவருக்காகக் குரல் கொடுப்பது உலக வழக்கம் என்று கூறிய அவர், அந்த வகையில் இலங்கையில் உள்ளவர்கள் முருகன் உள்ளிட்டவர்களின் விடுதலைக்கு உதவ முன்வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

10 லட்சம் பேர் இலங்கையில் கையெழுத்திட்டால், அவற்றை உள்ளடக்கி ஒரு கருணை மனுவை இந்திய அரசிடம் சமர்ப்பித்து, தனது மகன் முருகன் உள்ளிட்டவர்களை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய முடியும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டிருக்கின்றார்.

இலங்கையில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள், முருகனின் பள்ளியில் ஒன்றாகக் கல்வி கற்றறவர்கள் என பலதரப்பட்டவர்களும் தனது முயற்சிக்கு உதவி புரிய முடியும் என்றும் முருகனின் தாயார் குறிப்பிட்டுள்ளார்.
--