Saturday, August 16, 2014

தமிழிசைக்கு வைகோ வாழ்த்து

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு

வைகோ வாழ்த்து



தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள், அக்கட்சியின் அகில இந்தியத்  தலைமையால் அறிவிக்கப்பட்ட செய்தி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், 

தன் பேச்சு ஆற்றலாலும், கட்சிப் பணிகளாலும் அனைவரின் மதிப்பையும் பாராட்டுகளையும் பெற்றுள்ள சகோதரி தமிழிசை அவர்கள், அக்கட்சியின் அகில இந்திய தேசியச் செயலாளராகவும் சிறப்பாகப் பணி புரிந்தார். மருத்துவத் துறையிலும் சிறந்த சேவை செய்து வருவதாகவும், அவரது அருமைத் தந்தையார் இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் அவர்கள் வழியிலேயே தமிழ் மொழி, தமிழ் இனம் மீது எல்லையற்ற பற்றும் அதற்குத் தொண்டு ஆற்றும் அர்ப்பணிப்பு உணர்வும் மிக்கவர் என்றும் அரசியல், சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளில் ஆழ்ந்த புரிதலும், மதிநுட்பம் கொண்டு வாதாடும் வல்லமையும் கொண்டவர் என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.

 அனைவரிடத்திலும் அன்பு பாராட்டி, இனிய இயல்புடன் பழகுகின்ற பண்புகள் நிறைந்தவர் என்றும் இத்தகைய பன்முகத் திறன் வாய்ந்த சகோதரி திருமதி தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள், பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் பொறுப்பில் சிறப்பாகச் செயல்பட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மகிழ்ச்சியோடு வாழ்த்துவதாகவும் கூறியுள்ளார்.,

கோவையில் தங்கம் பறிமுதல்

கோவை விமான நிலையத்தில் சிங்கப்பூரில் இருந்து கடத்தி  வரப்பட்ட 850 கிராம்  தங்கத்தை  சுங்க இலக்கா  அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சிங்கப்பூரில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு 10 30 மணி அளவில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் வந்தது மேலும் பயணிகளிடம் சுங்க இலக்கா அதிகாரிகள் சோதனை நடத்தியதில் திருப்பூர் மாவட்ட சேர்ந்த ஜாகிர் உசேன் என்ற இளைஞர் சந்தேகத்திற்கு இடமாக முன்னுக்கு பின் முரணான தகவல் அளித்ததை அடுத்து அதிகாரிகள் நடத்திய சோதனையில், அவர் மறைத்து வைத்திருந்த  20 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை மீட்கப்பட்டது.

சுங்கசாவடி வரி வசூலை எதிர்த்து விரைவில் போராட்டம் - சீமான் அறிவிப்பு

சுங்கசாவடி வரி வசூலை எதிர்த்து விரைவில் போராட்டம் - சீமான் அறிவிப்பு


கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் தீரன் சின்னமலை வீர அஞ்சலி செலுத்தம் கூட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய ஒருங்கிணைப்பாளர் சீமான், நெடுஞ்சாலைகளில் சுங்கசாவடி வரி வசூலை எதிர்த்து விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார்