Friday, July 14, 2006

Subavee


பொடா எதிர்ப்பு மாநாட்டில்
கலந்து கொள்ளாதது ஏன் ?

- சுப. வீரபாண்டியன் விளக்கம்


பொடா வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெறக்கோரியும், மரண தண்டனை ஒழிப்பு முதலான கோரிக்கைகளை முன் வைத்தும், மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் சார்பில் சென்னையில் நாளை (15.07.2006) மாநாடு நடைபெற உள்ளது. அக்கோரிக்கைகள் நியாயமானவையும் வரவேற்க்கத்தக்கவையும் ஆகும்.எனினும், பொடாவைத் தமிழ்நாட்டில் மிகக் கொடுமையான முறையில் நடைமுறைப் படுத்தியவரும், இன்றும் அதனை நியாயப்படுத்திக் கொண்டிருப்பவருமானமுன்னாள் முதல்வர் செயலலிதாவின் கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்களை முன்னிறுத்தி பொடா வழக்குகளைத் திரும்பப்பெறக் கோருவது புரியாத புதிராக உள்ளது.2002 ஆகஸ்டில் பொடா எதிர்ப்பு முன்னணி ஒன்று உருவாக்கப்பட்டது. ஆனால் அம்முன்னணி செயல்படாமலே போய்விட்டது. செயல்பட வேண்டிய நேரத்தில் செயல்படாமல், இன்று பொடாவை எதிர்ப்பது புதிதாக மலர்ந்துள்ள சனநாயகச் சூழலையே காட்டுகிறது.ஆனாலும் செயலலிதாவை இன்றும் ஆதரிக்கின்ற, அவர் கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற கட்சியினரை முன்னிறுத்தி நடத்தப்படும் நாளைய மாநாட்டில் பொடாவில் பாதிக்கப்பட்டு ஏறத்தாழ 1ணீ ஆண்டுகாலம் சிறையில் இருந்த என் போன்றோர் கலந்து கொள்ள இயலாத நிலையில் உள்ளோம்.எனினும், நாட்டு மக்களுக்குத் தொடர்ந்து நன்மைகளைச் செய்து கொண்டிருக்கும் கலைஞர் தலைமையிலான இன்றைய தமிழக அரசு பழைய பொடா வழக்குகளை விலக்கிக் கொள்ளும் இனிய செய்தியை மிக விரைவில் வழங்கும் என்பது நம் நம்பிக்கை.

Wednesday, July 12, 2006

N Ram: First Indian National to get "Sri Lanka Rathna" Award

N Ram: First Indian National to get "Sri Lanka Rathna" Award
The Highest national honour conferred by Sri Lanka on non - nationals is the "Sri Lanka Rathna " award.Narasimhan Ram the Editor in chief of four chennai based publications became the first Indian national to be awarded that honour on Nov 14th. Apart from the fact that "The Hindu", " Frontline" "Business Line" and "The Sports Star" are very familiar to Sri Lankan readers there were other reasons too for the sixty year old Tamil Brahmin of Iyengar stock to be made Sri Lanka Rathna. Predominant among them is the abiding interest he shows in Sri Lankan affairs and his contribution to the resolution of the ethnic conflict here. N. Ram as he is generally known has focussed much of his personal and professional attention towards Sri Lanka in general and the issue of resolving the ethnic conflict in particular. In the eighties when India played a mediator role people like N. Ram played a supportive role in an unofficial capacity.Being close to almost all the big players in both Countries and having special access to the power corridors of New Delhi N. Ram were very effective in a behind the scenes role. Though modest about it Ram contributed greatly to the process which culminated in the signing of the Indo - Lanka accord by JR Jayewardene and Rajiv Gandhi on July 29th 1987. On paper it was and still is the best possible arrangement ever made to resolve the Sri Lankan crisis by guaranteeing the unity and territorial integrity of the Country on the one hand and ensuring the legitimate rights of Sri Lankan Tamils on the other. The 13th amendment to the Sri Lankan constitution paved the way for Provincial councils while the 16th amendment made Tamil an official language. Both amenments were off - shoots of the Indo - Lanka accord. In later years India withdrew from its mediatory role for reasons that are well - known. The Hindu too stepped back from its crusading role but continued to be a concerned commentator and observer. It is regarded in India as the foremost authority on Sri Lankan affairs and has effectively helped mould public opinion on the issue. The paper is influential enough to set the parameters for most media coverage in India. Ram himself is often cited as an expert on Sri Lanka and is interviewed by mediapersons and diplomats from different parts of the world. He is also busy on the seminar and lecture circuit. What is of importance is the continuing reliance of political leaders and bureaucrats on the input provided by Ram and the Hindu in formulating and implementing policy on Sri Lanka. It was the Hindu which played a leading role in encouraging an interventionist role for India in Sri Lanka in the eighties. Today it advocates an open "hands off "policy towards Sri Lanka while being supportive of whatever assistance possible to help resolve the problem in a manner acceptable to all sections of the people. Ram himself with the wisdom of hindsight sees the earlier New Delhi policy as being "schizoid". This decisive shift in Indian policy also took on an anti - tiger veneer after the Rajiv Gandhi assassination. Once it was established that the LTTE was responsible for the killing the Hindu along with many other Indian media became stridently critical of the LTTE. This perspective gathered momentum over the years as LTTE conduct deteriorated into extremism bordering on neo - fascism. Being privy to a lot of in depth information about the LTTE compared to other Indian media the journal has been firmly opposed to tiger antics on a principled basis. This position manifests itself very clearly. This naturally has led to much resentment in the tiger and pro - tiger camp. The tigers and fellow travellers feel that New Delhi could have been swayed to some extent during the BJP period if not for the Hindu and "Hindu" Ram. Though Ram was for long Editor of "Frontline" and "Sports Star" he is popularly referred to as "Hindu" Ram. Since he has been the public face of the Hindu group of publications for long and has been forthright in his criticism of the LTTE it is N. Ram who is often singled out for virulent attacks by the tigers and their acolytes. Most of the pro - tiger elements in Tamil Nadu have a background of Dravidian nationalist ideology. A crucial component of this ideology is its pronounced anti - Brahminism. As N. Ram is from a Vaishnavite Iyengar Brahmin family which incidently owns the "Hindu" Group of publications the pro - tiger lobby accusations are casteist and charge him of being anti - Tamil.The "Hindu" is derisively referred to as the "Mahavishnu of Mount Road". This is a ruse regularly used by the tiger elements. If the LTTE is criticised it is twisted as being anti - Tamil. The Hindu editorial policy and N. Ram's personal worldview to a great extent is against communalism, ultra - nationalism, fundamentalism etc. Contrary to the name "The Hindu" the newspaper has firmly and actively opposed Hindu fundamentalism in India. The paper and newsmagazine have been in the frontline of resistance to the Bharatiya Janatha Party and its kindred organizations known as the "Sangh Parivar like Rashtriya Seva sangham (RSS), Vishwa Hindu Parishad (VHP) Bajrang Dal etc. It is this ideological position that forms the basis of policy towards the LTTE. Despite claims of fighting for lofty ideals the LTTE of today has become a reactionary outfit . It also poses a long term threat to the stability of India. The Hindu and N. Ram feel that the best solution to Sri Lankas ethnic crisis is maximum devolution to a federal unit within a united Sri Lanka. It was felt in recent times that Chandrika Kumaratunga provided the best bet in Sri Lanka towards the realisation of that goal. There is no doubt that recent developments such as the rise of Sinhala chauvinist forces like the Jathika Hela Urumaya and Mahinda Rajapakse's insistence on a unitary Constitution etc will be prickly issues to the avowed policy of both India , The Hindu and N. Ram. The LTTE lobby loves to attack the "Hindu" and N. Ram as causes for its abysmal failure in hoodwinking the Indian establishment. I too have been attacked for this "Hindu" connection. I was the Frontline correspondent in Colombo from 1985 to 1987 and the Hindu correspondent from 1986 to 1987. Nowadays I contribute articles to Frontline infrequently. Because of this the tiger lobby attacks me too as an Indian or Brahmin stooge something which tickles my fancy often. What the tiger lobby tends to forget now is the fact that the "Hindu" and "Frontline" voiced the grievances of the Tamil people to the world during the 1983 - 1987 years. N. Ram himself took a keen personal interest in Sri Lankan issues and interviewed people like JR Jayewardene, Lalith Athulathmudali, Gamini Dissanayake, Appapillai Amirthalingam and Velupillai Pirapakaran. Ram's interview with the LTTE leader carried in two instalments remains the most quoted one by Pirapakaran so far. The LTTE and its supporters would do well to do some soul searching into what went wrong with their "hindu" connection instead of launching anti - brahmin tirades against Ram. Sometimes I am amused when I read the verbal abuse in pro - tiger Tamil journalisms about the "paarpaneeyam" (brahminism) of N. Ram. It appears to me that some of these critics perceive him as a typical orthodox Iyengar brahmin with the striped "namam" on his forehead. The reality is starkly different from perception. Far from being a conservastive brahmin the Hindu editor in chief is a progressive cosmopolitian equally at ease in the drawing rooms of the West and the parlours of the East. His first wife Susan was an English lady who was for many years in charge of Oxford University press publications in India.He is now married to Mariam who I believe is a Keralite Syrian Christian. She is an advertising executive. He is no chanter of Sanskrit slogas or manthras but someone capable of quoting from the Western classics as he once engaged in a verbal duel with JR Jayewardene on Shakespeare. Since this article is about the Sri Lanka Rathna and is written primarily for Sri Lankan readers I have concentrated mostly on the Sri Lankan angle. Ram's CV itself says that one of his special interests in the Journalist field is - " The Sri Lanka ethnic crisis and the Tamil question; the experience of, and lessons from, India’s interaction with this problem." It would however be a gross error to confine this piece to that perspective alone. The man has a multiple of talents and a variety of interests. One of his chief interests is cricket. My first visit to his house at Alwarpettai in Chennai was in 1985. England was touring India. I was watching a thrilling match on TV and reluctantly left for his house as he invited me to come over in the afternoon. When I went there he asked me to come up where along with a couple of friends Ram was watching the game on TV too. I happily sat there amd watched. It was only after the match was over that we got talking. I later learnt that he had captained the Madras University team and also played for Tamil Nadu state in the Ranji Trophy tournament. He was a wicket - keeper batsman. It was this cricketing background which helped Ram strike up a deep friendship with the late Gamini Dissanayake. I am not sure but I think NPK Salve the Indian politician and Cricket Board chairman introduced Ram to his Sri Lankan counterpart first. Both became close. Gamini metamorphosed over the years into a firm friend of India and a dove on the ethnic question. The Gamini - Ram link was of great value in the run up to the 1987 accord. Ram was used as an "unofficial emissary" to carry messages that could not be sent "officially" between Colombo and New Delhi .Like the ping - pong diplomacy between USA and China this was cricket diplomacy. Gamini and Mrs. Dissanayake spent a few days with Ram in India a few weeks before his death. Another of Ram's characteristics is his pro - CPM or marxist sympathies. In his youth he was an activist of the pro - marxist Indian Students Federation. It was as an ISF activist that I first saw him in an incident of high political drama. I was then a student at the Madras Christian College in Thambaram.Muttuvel Karunanidhi was the DMK chief minister of Tamil Nadu.There was a rice shortage then due mainly to blackmarketeers hoarding it. Karunanidhi appealed to the people asking them to distribute hoarded rice. ISF student members took matters into their hands and in a show of force seized ssacks of rice from the hoarders and began distributing to the people. Police was called in and 16 ISF members arrested. Ram was a state level office bearer of the ISF and arrived at the scene to sort out matters. He was detained too. The University students organized a city wide strike. As a result of the student agitation the detained persons including Ram were released. When I was sorting out my papers prior to leaving Sri Lanka I ran across the leaflet issued then condemning the detention of N. Ram. I kept it with me and showed it to Ram later when I met him in the USA. He seemed visibly embarassed at being reminded of his hectic activist past. Ram continues to maintain his leftist connections and CPM leanings though that is not allowed to affect Hindu editorial policy.Ram is closely associated with Prakash Karat the current Indian CPM leader.Due perhaps to the CPM background Ram keenly follows developments in China too and has written a series of articles after his numerous trips there. Another interest is literature though his bachelors and masters degrees were in history. Ram was closely associated with the doyen of Indian writers in English RK Narayan and even co - wrote a biography of his early years with Susan Ram. Once he was accompanying Narayan to see his former residence at Puraswakkam to find that the old house was being demolished for a new building. Ram managed to salvage the wooden lattice above the doorway and present it to Narayan as treasured memento. He is also a fan of crusading author Arundh athi Roy and was once seen sitting on the steps of the British Council auditorium to listen to her lecturing to a packed audience. Among his many interests are dogs. Ram raises pedigreed cocker and golden spaniels that have won many , many prizes and ribbons. he is also fond of music and was one of the speakers recently at the release ceremony of the path - breaking "thiruvasagam in symphony" by Ilaiyarajah. He is also an honoured invitee to many DMK functions and is often the only man in Western attire on stage amid the "karai verti" (bordered dhotis) clad DMK functionaries. Though the lunatic fringe of dravidianism continues to rant and rave mainstream dravidianism has established a sound relationship with the Mount Road Mahavishnu.Ram is also associated with the Nawab of Arcot in the harmony association which promotes unity and amity in India. The question of free _expression is of crucial importance. Ram has been an ardent votary of the principle. "The Hindu" faced a crisis recently when Tamil Nadu chief minister Jayalalitha Jayaram launched an offensive against the paper. She was offended by the criticism levelled by the paper. After filing a series of cases in court she overstepped her mark by getting arrest warrants issued against senior journalists including executive editor Malini Parthasarathy a cousin of Ram.. Ram spearheaded the resistance to this abuse of power and countered Jayalalitha at many levels. Finally she backed down. The incident demonstrated clearly the extent of influence the paper and its editor in chief had at an all India level. Ram has been in journalism since 1966. It is a family business as the "Hndu" is owned by members of the Kasturi Rangan family. Ram also acquired a masters in comparative journalism from the Columbia University in New York. His biggest journalist triumph was the Bofors scandal of the late eighties and nineties pertaining to artillery equipment bough from Sweden. Together with Geneva based Chitra Subramaniam and also on his own N. Ram uncovered many aspects of L'affaire bofors . He won many honours and awards for this He was also awarded the Pathma Bhushan in 1990 by the President of India. (R. Venkatraman) I have been interacting with N. Ram for about two decades now. The relationship has been volatile at times because of certain issues. I was extremely critical of the IPKF and as a result was fired by the Hindu then. This dispute however did not affect our personal relationship. Even professionally I contribute articles to Frontline and Hindu depending of course on the availability of time and space. I will however be appreciative of him for two things. One is for his solidarity and support when I was arrested by Sri Lankan authorities in 1987 for alleged links with the LTTE. The flimsy basis was an interview I obtained with then deputy - leader of LTTE Gopalswamy Mahendrarajah alias Mahathaya. The interview was published in "the Island" and not "The Hindu". When Neelan Tiruchelvam informed Ram of the arrest he took up the issue though he was advised by many to "keep out" since it was not directly connected to "The Hindu". But Ram undertook a special trip to Colombo to meet with JR Jayewardene and urge my release. He also published the "Mhathaya" interview in "the Hindu" threby incurring displeasure in sections of South Block. The other was when the LTTE conducted a campaign against "Muncharie" the Tamil weekly I was editing in Toronto. I was compelled to shut the paper down because the tigers intimidated advertisers and sellers of the paper.Not only did Ram condemn the incident but also published my open letter on the problem. He also alerted several media rghts organizations about the issue. Fearing for my physical safety in Toronto as I had earlier been attacked and hospitalised by baseball bat wielding LTTE goons he asked me to come down to Madras and work and stay there for a while. I declined but remain grateful for the timely offer. Sri Lanka is in the throes of a major crisis. The paradigm shift in Southern politics of moving towards Federalism has received a jolt from Mahinda Rajapakse's insistence on a unitary state. The LTTE through its enforced boycott has demonstrated that it is shedding the so called exploration of a federal solution and heading out towards its Eelamist goal. The coming months will be extremely volatile. "The Hindu" from its vantage point in Chennai will no doubt be monitoring and reporting developments. Wise counsel is necessary to ease tensions and restore sanity. "The Hindu" group carrying much credibility on Sri Lanka can make a positive contribution in this. Narasimhan Ram will be taking a personal interest in all this. After all he is now an honoured "non - citizen" of the Island being a "Sri Lanka Rathna".

Tuesday, July 11, 2006

சோ என்ற அக்கிரகாரத்து வக்கிரம்! - இளங்கோ (இலண்டன்)

சோ என்ற அக்கிரகாரத்து வக்கிரம்! - இளங்கோ (இலண்டன்)பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பார்ப்பானை முதலில் அடி பிறகு பாம்பை அடி என்றார் தந்தை பெரியர். அந்த ஈரோட்டுக் கிழவரின் வரிகள் நூற்றுக்கு நூறு சரி என்பதை நாளுக்கு நாள் மெய்ப்பித்து வருகிறது ஓர் அக்கிரகாரத்து வக்கிரப் பிறப்பு. அதன் பெயர் சோ. எழுத்துச் சந்தையில் விலை போகாத துக்ளக் இதழை அது நடத்தி வருகிறது. பாம்பிற்கு பல்லில் மட்டும் நஞ்சு என்றால் இதற்கோ உடல் முழுவதும் நஞ்சு. நேரம் கிடைக்கும் போதெல்லாம் விடுதலைப் புலிகளைக் கரித்துக் கொட்டுவதற்கும் அவர்கள் மீது பொய்க் குற்றச் சாட்டை வாரி இறைப்பதற்கும் அது சற்றும் தயங்கியதில்லை. சென்ற வார துக்ளக் இதழில் (28.06.2006) “மீண்டும் வருகிறது புலி ஆதரவு” என்று தலையங்கம் தீட்டி விடுதலைப் புலிகளின் மீது வசைமாரி பொழிந்திருக்கிறது. அனுராதபுரம் கெப்பிட்டிக்கொல்லாவ பகுதியில், பேருந்து மீது நடத்தப் பட்ட தக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு அனுதாபமும் தெரிவித்து தாக்குதலை விடுதலைப்புலிகளே நடத்தியதாக குற்றமும் சாட்டியுள்ளது. இத் தாக்குதல் மனித நேயத்திற்கு எதிரான பயங்கரவாதச் செயல் என்பதை சோ சொல்லி நமக்கு தெரிய வேண்டியதில்லை. அந்தப் படுகொலைக்கு விடுதலைப் புலிகள் தங்களது மறுப்பையும் கண்டனத்தையும் தெரிவித்துவிட்டார்கள். விடுதலைப் புலிகள் மீது மாற்றுக் கருத்துக் கொண்டிருப்பவர்கள்கூட அப்படிப்பட்ட தாக்குதலை விடுதலைப் புலிகள் செய்யமாட்டார்கள் என்றே கூறியிருக்கின்றனர். இலங்கையில் உள்ள சிங்கள இனவெறியர்களே இத்தாக்குதலுக்கு புலிகளைக் காரணம் காட்டியிருந்தார்கள். அந்தச் சிங்கள வெறியர்களின் இனப் பகைக்குச் சற்றும் குறைந்ததல்ல தன்னுடைய இனப் பகை என்பதை சோ நன்றாக வெளிக்காட்டியிருக்கிறது.இங்கே நமக்குள் மற்றுமொரு கேள்வி எழுகிறது. அப்பாவி மக்கள் தமிழர்களாக இருந்தாலும் சிங்களவர்களாக இருந்தாலும் அல்லது வேறு இனத்தவராக இருந்தாலும் அவர்கள் மீது தாக்குதல் நடத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் காலம் காலமாக தமிழர்கள் படுகொலை செய்யப் பட்டபோது அதைக் கண்டிக்காமல் அந்தப் படுகொலைகளுக்கு காரணமான சிங்கள அரசைத் துதி பாடிய சோ, தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர் குருவிகளைச் சுடுவது போல் சுட்டுக் கொன்றபோது அதைக் கண்டுகொள்ளாமல் இருந்த சோ, குஜராத்தில் அப்பாவி முஸ்லீம்கள் இந்து வெறியர்களால் படுகொலை செய்யப் பட்டபோது அவைகளெல்லாம் கொலைகள் அல்ல என்று வெட்கமின்றி எழுதிய சோ தற்போது தன்னுடைய ஆரியப் பாசத்தைக் காட்டுகிறது என்றால் அதன் பொருள் என்ன? காஷ்மீர் பார்ப்பானுக்கு தேள் கொட்டினால் கன்னியாகுமரிப் பார்ப்பானுக்கு நெறி கட்டும் என்று பெரியார் சொன்னதற்கு ஒரு படி மேலே போய் ஆரியச் சிங்களவனுக்கு தேள் கொட்டினால் ஆரியப் பார்ப்பானுக்கு நெறி கட்டும் என்பதுதானே பொருள்.
தனது தலையங்கத்தில் “இங்கே நடப்பது இலங்கைத் தமிழர் ஆதரவுக் கூட்டங்கள் அல்ல, விடுதலைப் புலிகள் பிரச்சாரக் கூட்டங்களே!” என எழுதியிருப்பதுடன் தமிழின உணர்வாளர்களான வைகோ, திருமாவளவன் போன்றவர்களையும் வசை பாடியிருக்கிறது. வைகோ, நெடுமாறன், திருமாவளவன் போன்றவர்கள் என்றைக்கும் விடுதலைப் புலி ஆதரவாளர்களே, இது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. அதை மறைக்க அவர்கள் எந்நாளும் முற்பட்டதில்லை. அவர்களின் ஈழ அதரவுக் குரல் தற்போது ஓங்கி ஒலிப்பதற்கான முக்கிய காரணம் ஈழத்தமிழர்கள் மீது சிங்கள அரசால் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் இனப்படுகொலையே ஆகும். இந்த உண்மை சோவிற்கு நன்றாகத் தெரியும் ஆனால் அதன் வக்கிரப் புத்தி மனித நேய உணர்வோடு செயற்படும் தமிழ் உணர்வாளர்களையும் விட்டு வைக்கவில்லை. உண்மையில் சோவிற்கு எதிரி விடுதலைப் புலிகளோ அல்லது வைகோ, நெடுமாறன், திருமாவளவன் போன்றவர்களோ அல்ல. சோவிற்கு எதிரி தமிழும் தமிழர்களும்தாம். புலிகள் மீது அதற்குத் தனிப் பட்ட முறையில் வெறுப்பு எதுவும் கிடையாது. புலிகள் யார்? தமிழர்கள். அந்த ஒன்றைத்தான் அதனால் சகித்துக் கொள்ள முடியவில்லை. தமிழர்களுக்கு ஒரு நாடு வேண்டுமென்று அவர்கள் போராடுகிறார்களே! அதை இங்கிருக்கும் வைகோ, நெடுமாறன், திருமாவளவன் போன்றவர்கள் ஆதரிக்கின்றார்களே! இது தொடர்ந்தால் தமிழின உணர்வு பெருகிவிடுமே! இதை நினைக்கும் போது அந்த வக்கிரப் பிறப்பால் இருப்புக் கொள்ள முடியவில்லை. நச்சுக் கருத்துக்களைப் பூசி மெழுகி நடுநிலைவாதக் கருத்துக்களாகக் காட்ட முயற்சிப்பதே அதன் பத்திரிகைப் பாணி. ஒரு முறை துக்ளக் கேள்வி-பதிலில் "காந்தியடிகளைக் கொலை செய்த நாதுராம் கோட்சே எந்த இயக்கத்தையும் சேர்ந்தவரல்ல" எனக் கூறியிருந்தது. ஆஹா! என்ன ஒரு நடுநிலை! முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் வித்தையை சோவிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும். "நாதுராம் கோட்சேயும் நானும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இணைந்திருந்தோம்" என நாதுராம் கோட்சேயின் சகோதரர் கோபால் கோட்சே வாக்குமூலம் கொடுத்து அது, பல இதழ்களில் வெளி வந்த பிறகும் சோ இப்படி பதிலளிக்கிறது என்றால் அந்தப் பித்தலாட்டத்தை என்னவென்று அழைப்பது? அதே போல் இறுதியாக நடந்த துக்ளக் ஆண்டு விழாவில் நேயர் ஒருவர் இஸ்லாமியத் தீவிரவாதம் பற்றிக் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த சோ, விடுதலைப் புலிகள் இஸ்லாமியர்கள் அல்ல எனத் தொடங்கி கிறிஸ்தவ தீவிரவாதம் பௌத்த தீவிரவாதம் போன்றவற்றை விமர்சித்து இறுதியில் நக்சலைட்டில் இந்துக்களும் உள்ளார்கள் என்று முடித்தது. ஆனால் இந்தியாவை அச்சுறுத்தும் இந்துத் தீவிரவாதம் பற்றி ஒரு வரி பேசவில்லை. ஆழகாக முடிச்சவிழ்ப்பது என்று சொல்வார்களே அது போன்றதுதான் சோவின் பூணூல் வேலை. தனக்கும் தலைமுடிக்கும் தாடிக்கும் வெகு தூரம் என்றாலும் தலைக்கொரு சீயாக்காயையும் தாடிக்கொரு சீயாக்காயையும் பூசிக்கொண்டு தன்னை நடுநிலைவாதி எனப் பீதற்றிக் கொள்கிறது. இதன் நடுநிலைமை முன்னாள் ஓடுகாலியும் இந்நாள் கொலைகாரருமான சங்கராச்சாரி ஜெயந்திர சரஸ்வதி விடயத்தில் முற்றிலுமாக அடி பட்டுப் போய்விட்டது. தமிழர்கள் மீதுதான் அதற்கு இனப்பகை என்றால் ஒரு பாவமும் அறியாத தமிழ் இலக்கியங்களையும் அது விட்டு வைக்கவில்லை. கலைஞர் கருணாநிதி போன்றவர்கள் தமிழ் இலக்கியங்களான திருக்குறள், தொல்காப்பியம், சிலப்பதிகாரம் போன்றவற்றுக்கு உரை எழுதினால் அவற்றை தனது துக்ளக்கில் கேலிப் படங்களாக அச்சிட்டு கொச்சைப்படுத்துவதுடன் தற்போது நாடிருக்கும் நிலையில் இவைகள் தேவையா எனக் கேள்வி எழுப்பும். ஆனால் அது மட்டும் தனது இதழில் வேத உபநிடதக் குப்பைகளையும் புராண இதிகாசக் கழிசடைகளையும் கறுப்பு மையால் நிரப்பிக் கொண்டிருக்கும். தற்போது ‘ஹிந்து மஹா சமுத்திரம்’ என்ற ஆபாச அருவருப்புத் தொடரை வெட்கம் சிறிதும் இல்லாமல் எழுதி வருகிறது.கண்ணகி என்ற இலக்கியப் பாத்திரத்தின் மீது பகுத்தறிவாளர்களுக்கு சில மாற்றுக் கருத்துக்கள் உள்ளன. இருப்பினும் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த சிலையை அகற்றியது தமிழ் உணர்வாளர்களின் உள்ளங்களைக் காயப் படுத்தியது. எனவே அதை மீண்டு அதே இடத்தில் நிறுவவேண்டும் என்று கோரியதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் சோவிற்கோ சிலையை மீண்டும் நிறுவவேண்டும் என்ற கோரிக்கையை கேட்டவுடன் இனப் பகை தலைக்கேறிவிட்டது. கண்ணகியைப் பற்றி பெரியார் என்ன சொன்னார் என்பது தெரியாதா எனக் கேள்வி எழுப்பியது. அது வரை காலமும் பெரியாரை எதிர்த்த சோ கண்ணகி விடயத்தில் பெரியாரைத் துணைக்கு அழைத்ததன் காரணம் என்ன? கண்ணகி தமிழச்சி என்ற ஒரேயொரு காரணம்தான். இதுவே அகற்றப் பட்டது சீதை, திரௌபதி போன்ற ஆரியப் பெண்களின் சிலையாக இருந்தால் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு களத்தில் குதித்திருக்கும். இதே போல் கன்னியாகுமரியில் கலைஞர் வள்ளுவருக்கு சிலை எழுப்பியபோதும் அதை எதிர்த்து தனது பார்ப்பனப் புத்தியைக் காட்டிக்கொண்டது. எந்தக் கெடுதலையும் ஏற்படுத்தாத கண்ணகி, வள்ளுவர் சிலைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் சோ, இரத்த ஆற்றை ஓட வைக்கும் இராமர் கோவிலை ஆதரிக்கிறது. தமிழ்த் தேசியத்திற்குத் தீவிரவாதப் பட்டம் கட்டும் சோ, இந்தியத் தேசியப் போர்வையில் உலாவரும் இந்துத்துவத்திற்குப் புனிதப் பட்டம் கட்டுகிறது. இந்த நயவஞ்சகத்தனத்தைத்தான் சோ நடுநிலை எனக் கூறிக்கொள்கிறது.“நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில், கோப்பையை வெல்லும் வாய்ப்பு எந்த அணிக்கு அதிகம் என நீங்கள் நினைக்கிறீர்கள்?” இப்படி ஒரு கேள்வி சென்ற வார துக்ளக் இதழில் (28.06.2006) சோவிடம் கேட்கப் பட்டிருக்கிறது. அதற்குச் சோ, இந்த ஆட்டம் பற்றியோ, அதில் பங்கு கொள்ளும் அணிகளின் பலம் பற்றியோ எனக்கு ஒன்றும் தெரியாது. தெரிந்து கொள்ள முயற்சிக்கவும் இல்லை. எனப் பதிலளித்திருந்தது. கால் பந்துப் போட்டிகளில் அக்கறை கட்டாத சோ கிறிக்கற் போட்டிகள் என்றால், அவற்றைத் தனது இதழில் வருணிக்கத் தொடங்கிவிடும். இதில் என்ன தவறு எனப் பலர் நினைக்காலாம். இதில் மற்றும் ஒரு பார்ப்பனச் சூழ்ச்சி அடங்கியுள்ளது. கால்பந்து ஆட்டங்கள் உடலுக்கும் உள்ளத்திற்கும் உற்சாகத்தைத் தருபவை. அவற்றை விளையாடுவதற்கு உருக்கேறிய உடல் வலிமை தேவை. பார்ப்பனர்காளால் அது முடியாது. கிறிக்கற் அப்படி அல்ல. அதனால்தான் அன்றும் சரி இன்றும் சரி இந்தியக் கிறிக்கற் அணியில் முக்கால்வாசிப் பேர் பார்ப்பனர்களாகவே உள்ளனர். வட மானிலங்களில் மட்டுமல்ல தமிழ் நாட்டிலும் கிருஷ்ணமாச்சாரி சிறிகாந்த் முதற் கொண்டு சடகோபன் ரமேஸ் வரை இந்திய அணியில் இடம்பெற்ற அனைவரும் பூணூல்காரப் பார்ப்பனர்களே. கிறிக்கற்றில் அவாள்களின் ஆதிக்கமே கொடிகட்டிப் பறக்கிறது. அதே நேரம், தமிழ் நாட்டில் கால்பந்தின் செல்வாக்கு அதிகரித்து விட்டால் அதில் பார்ப்பனர் அல்லாதவர்களே அதிகம் இடம்பெறுவார். அத்துடன் கிறிக்கற்றின் செல்வாக்கும் சரிந்து விடும். இப்போது புரிகிறதா சோவின் பதிலில் அடங்கியுள்ள சூட்சுமம். அரசியல், சமூகம், இலக்கியம் மட்டுமல்லாமல் விளையாட்டிலும் ஆதிக்க வெறியைக் காட்டுகிறது சோ என்ற பார்ப்பனப் பாம்பு.சில மாதங்களுக்கு முன் குஷ்பு, சுஹாசினி போன்றவர்களின் கருத்துக்கள் பல தமிழக மக்களை சினம் கொள்ள வைத்தது. குஷ்பு சுஹாசினி போன்றவர்கள் தமிழ் மீதும் அதன் வளர்ச்சி மீதும் அக்கறை அற்றவர்களாக இருக்கலாம், ஆனால் தமிழை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் அல்ல. பெண்ணிய நோக்கிலேயே அந்தக் கருத்துக்களை அவர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால் சோ என்ற அக்கிரகாரத்து வக்கிரமோ தமிழின எதிர்ப்பையே தன்னுடைய தலையாயத் தொழிலாகக் கொண்டிருக்கிறது. குஷ்பு, சுஹாசினி போன்றவர்களுக்கு எதிராக பண்பாட்டுப் போரை நடத்திய தமிழ்க் காவலர்கள் தமிழ் நாட்டில் இருந்து கொண்டும், தமிழையும் தமிழர்களையும் தமிழ் இலக்கியங்களையும் கொச்சைப் படுத்திவரும் சோவை விட்டு வைத்திருப்பது வியப்பையும் வருத்தத்தையுமே அளிக்கின்றது. TAMILEELAM
http://www.dinakaran.com/daily/2005/Aug/24/chennai/chendist/kancNews4.html

வரலாற்றுச்சுவடுகள் - 01: வெண்மணி - ஆர். நல்லகண்ணு

சனவரி-பிப்ரவரி 2006


வரலாற்றுச்சுவடுகள் - 01: வெண்மணி

ஆர். நல்லகண்ணு



காலச்சக்கரத்தை திரும்பிப் பார்க்கிறேன் சரியாக 37 ஆண்டுகள். வரலாற்றின் நீண்ட நெடிய பக்கங்களில் 37 ஆண்டுகள் என்பது மிகக் குறுகிய காலம். நேற்று நடந்தது போல இருக்கிறது. தஞ்சாவூர் அருகே அன்று நடந்த கொடுமையை இன்று நினைத்தாலும் நெஞ்சில் குருதி வடிகிறது. இந்தியாவில் நடைபெற்ற உக்கிரமான கொடுமைகளை பட்டியலிட்டால் கீழ வெண்மணி கொடுமையும் ஒன்று. அன்று நடந்த கொடுமையை நான் வாசகர்களுக்கு பதிவு செய்கிறேன்.

1968 டிசம்பர் 25
கிறிஸ்துமஸ் பண்டிகை
ஏசுநாதர் பிறந்த நாள் விழா

உலகெங்கும் கொண்டாப்படும் திருவிழா. மக்கள் அனைவரும் திருநாளை மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடிக் கொண்டிருக்க தஞ்சை மாவட்ட கீழ்வெண்மணியின் தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்களுக்கு மட்டும் கொடிய இரவாகவும், விடியாத இரவாகவும் அமைந்தது.

ஆம் . அன்றிரவு தஞ்சை மாவட்டம், கீழ வெண்மணியில் தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 44 பேர் உயிரோடு தீ வைத்துக் கொளுத்தப்பட்டனர். கருகிச் சாம்பலாக்கப்பட்டனர். இவ்வாறு உயிரோடு தீக்கொழுத்தப்படும் அளவுக்கு அவர்கள் செய்த பாவம் வேறொன்றுமில்லை.

தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் சங்கமாகத் திரண்டு தங்களுக்குக் கிடைக்கும் வழக்கமான கூலியில் அரை லிட்டர் நெல் உயர்த்தித் தர வேண்டுமென்று கேட்டது தான் அவர்கள் உயிரோடு கொளுத்தப்பட காரணம்.

விவசாயத் தொழிலாளர்கள் சங்கமாகத் திரண்டு கூலி உயர்வு கேட்டனர். தங்களுக்குக் கிடைக்கும் கூலியில் அரை லிட்டர் நெல் உயர்த்தித் தர வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். அவர்களின் தொடர் கோரிக்கையின் விளைவாக 1967 ஆம் ஆண்டில் நடைபெற்ற முத்தரப்பு மாநாட்டில் கூலி உயர்வு ஒத்துக் கொள்ளப்பட்டது. ஆனால் பல மிராசுதாரர்கள் ஒத்துக் கொண்ட கூலியைக் கொடுக்க மறுத்தனர். உள்ளுர் விவசாயத் தொழிலாளர்களைப் பணிய வைக்க வெளியூர் ஆட்களை அமர்த்தினர். இத்துடன் நில்லாமல் விவசாயத் தொழிலாளர் சங்கங்களையே முடக்கிவிட வேண்டுமென்று நாகை வட்டார நிலப் பிரபுக்கள் தலைமையில் நெல் உற்பத்தியாளர் சங்கத்தை ஏற்படுத்தினர். அந்த சங்கத்திலிருந்து திட்டமிட்டு விவசாயத் தொழிலாளர்களைத் தாக்குவது, முக்கிய ஊழியர்களைக் கொலை செய்வது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். இச் சதிகள் சம்பந்தமாக அவ்வப்போது தஞ்சை மாவட்ட விவசாயத் தொழிலாளர் சங்கங்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களும் அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த சூழ்நிலையில் தான் அந்த உச்சக் கட்டக் கொடுமை நடந்தது.

25.12.68 மாலை 5 மணியளவில் வெண்மணிக் கிராமத்தைச் சேர்ந்த முத்துச்சாமி, கணபதி என்ற இரண்டு தாழ்த்தப்பட்ட விவசாயத்தொழிலாளர்களை மிராசுதாரர் சவரிராஜ் நாயுடு வீட்டில் கட்டி வைத்து அடித்து உதைத்திருக்கிறார்கள். சம்பவம் பற்றி கேள்விப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் திரண்டு வந்து கட்டை அவிழ்த்து விட்டு சென்றனர். அதன் பின்பு பெரு மிராசுதாரர் கோபால கிருஷ்ண நாயுடு போன்றோர் ஆள் திரட்டி வெண்மணி கிராமத்துக்கு அடியாட்களுடன் சென்றிருக்கிறார்கள்.

அவ்வாறு தாக்குவதற்கு சென்ற போது நடந்த கைகலப்பில் பக்கிரிசாமி என்பவர் இறந்து விட்டார். ஆனாலும் மிராசுதாரர்கள் துப்பாக்கிகள் சகிதம் அடியாட்களுடன் திரண்டு வந்து தாக்கியிருக்கிறார்கள். இதன் விளைவாக தொழிலாளர்களுக்கு துப்பாக்கி காயம் ஏற்பட்டது. துப்பாக்கித் தாக்குதலுக்குத் தாக்கு பிடிக்க முடியாமல் தொழிலாளர்கள் ஓடி விட்டனர். தப்பித்து ஓட முடியாத தாழ்த்தப்பட்டவர்களின் தெருவில் தங்கியிருந்த பெண்கள், குழந்தைகள், வயோதிகர்கள் உயிர் பிழைக்க கயவர்களிடம் மன்றாடியிருக்கிறார்கள்.

ஆனால் கொடுங்கோல் மிராசுதாரர்கள் மனம் இறங்கவில்லை. அனைவரையும் தெருக்கோடியிலுள்ள சிறு குடிசைக்குள் அடைத்திருக்கிறார்கள். தீ மூட்டி கதவை வெளியில் தாழ்பாளிட்ட அக்கிரமத்தைச் செய்தனர். தீயின் செந்நாக்குகள் அவர்களைப் பொசுக்க தொடங்கியது. அதன்பின்பும் அவர்கள் வெறி அடங்காமல் வெளியில் கதறிக் கொண்டிருந்த மூன்று சிறு குழந்தைகளையும் தூக்கி நெருப்பில் எறிந்த கொடுமையைச் செய்தனர். மேற்கண்ட கொடுமைகள் அனைத்தும் ஏக காலத்தில் நடந்துள்ளன.

இரவு எட்டு மணிக்கு சம்பவம் தொடர்பாக கீவளுர் காவல் நிலையத்திற்கு தெரிந்தும் காவல் துறையினர் இரவு 12 மணிக்கு வந்தனர். இரவு இரண்டு மணிக்கு தீயணைப்புப் படை வந்தது. அதிகார வர்க்கத்தின் கண்களில் பாமர மக்களின் உயிர் துச்சமானதே இந்த தாமதமாகும். மறுநாள் காலை 10 மணிக்கு குடிசைக்குள் நுழைந்து கருகிய 44 சடலங்களை எடுத்துள்ளனர். மேற்கண்ட 44 பேரும் கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்டது அரை லிட்டர் நெல் கூலி உயர்வு கேட்ட காரணத்திற்காக மிராசுதாரர்கள் அளித்த பரிசாகும்.

இத்தனை கொடுமையையும் செய்த அக்கிரமக்காரர்கள் அதன் பின் இதனை விவசாயத் தொழிலாளர்கள் மீதே பழி போட சூழ்ச்சி செய்தனர். இதற்கு உதவிகரமாக சில பத்திரிகைகள் இட்டுக் கட்டி செய்திகள் வெளியிட்டன. “விவசாயத் தொழிலாளர்களே தங்கள் பெண்டு பிள்ளைகளை இச் சிறு அறையில் தள்ளி வெளியில் தாழ்ப்பாளிட்டுக் கொன்றனர் என்று கற்பனைக்கும் எட்டாத பொய்யைக் கூறினர். நிலபிரபுக்கள் மீது ஆத்திரம் ஏற்படாமலிருக்க நுணுக்கமாகத் தயாரிக்கப்பட்ட பொய்யைச் செய்தி ஆக்கினர்.

ஆனால் போலீஸ் ஐஜியோ கீவளுர் வட்டாரத்தில் வைசன்ஸ் பெற்ற துப்பாக்கிகள் 42 இருப்பதாகவும், 28 ஆம் தேதி முடிய 5 துப்பாக்கிகளே போலீசுக்கு வந்துள்ளன என்ற கூறினார். இறந்தவர்களில் 19 பேர் பெண்கள், அதில் 12 பேர் திருமணமானவர்கள். 7 பேர் மணமாகாத இளம் பெண்கள், ஆண்கள் மற்றும் பச்சிளங்குழந்தைகள். 22 வயது முதிர்ந்த ஆண்கள் 3. துப்பாக்கிச் சூட்டில் காயமுற்றோர் 11 பேர்.

மிராசுதாரர்கள் வைத்த தீயில் மாதாம்பாள் என்ற பெண்மணி, தான் சாகும் பொழுதும் தான் வளர்த்த பிள்ளையை தீ தின்றுவிடக் கூடாது என்று அவ்வாறு அணைத்தபடியே தாயும் சேயும் இணைந்தே கரிக்கட்டியாய் கிடந்த நிகழ்ச்சி பார்த்த அனைவரையும் விவரிக்க முடியாத மீளாத் துயரத்தில் ஆழ்த்தியது.

அதையொட்டி அப்பொழுது ‘உழவுச் செல்வம்’ பத்திரிகையில் வெளிவந்த கவிதையைத் தங்களுக்குத் தருகிறேன்.

“பாவிகள் வைத்த நெருப்பு
உடலைக் கருக்கிய போதும்
பெற்றெடுத்த தங்கத்தைக் கைவிடவில்லை.
பாசத்தால் பற்றிக் கொண்டாய்.

வலது கை வெந்து விட்டது.
பிள்ளையைத தாங்கிய
இடது திருக்கரத்திலும்
சதையெல்லாம் தீ தீய்த்து
விட்ட போதிலும் -
எலும்புக் கரத்தால்
பிள்ளையை ஏந்திக்
கொண்டே பிணமாக கருகி
விட்டாயே.

உன் பிறப்பு உறுப்பெல்லாம்
நெருப்பு தின்று விட்ட
போதும் தாயே
பெற்றெடுத்த பிள்ளையை
அணைத்துக் கொண்டிருந்த
தாய்ப் பாசத்தை
தரணியெல்லாம் போற்றிப்
புகழப் போகிறது.

நீ உழைக்கும்
பெண்ணினத்துக்கு பெருமை
தேடித் தந்து விட்டாய்.
தாய்மைக்கு எடுத்துக்
காட்டாய் விளங்குகிறாய்.
நமது வர்க்கத்தின் சிறப்புச்
சின்னமாய் - அழியாத
ஓவியமாய் - உயர்ந்து
விட்டாய்.

உனது தியாகம் கவிஞர்களின்
கருப் பொருளாய் -
ஓவியர்களின் திரு உருவாய்
விளங்கட்டும்
உனது ஆசை நிறைவேற,
வர்க்கம் வாழ
என்றென்றும் உழைப்போம்
என உறுதி கூறுகிறோம்.

(உழவுச் செல்வம் சனவரி 15, 1969)

வெண்மணியில் நடைபெற்ற கோரக் கொடுமையை எதிர்த்து தமிழகம் வெகுண்டெழவில்லை. பண்பாடு, நாகரீகம், மரபு பற்றியெல்லாம் விண்ணுக்கும் மண்ணுக்கும் எட்டுமளவு வாய் கிழியப் பேசப்படும் தமிழகத்தில், வெண்மணியில் வெந்து சாம்பலாக்கப்பட்ட நாற்பத்தி நான்கு தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்களின் மீது இரக்கம் கூடக் காட்டவில்லையே ஏன்? என்பதைச் சிந்திக்க வேண்டியுள்ளது.

அப்பொழுது கோவை நகரத் தொழிலாளி வர்க்கமும், வேலூர் பீடித் தொழிலாளர்களும் வேலை நிறுத்தம் செய்தார்கள். கம்யூனிஸ்டு இயக்கத்தினர் கண்டனக் குரல் எழுப்பினார்கள் ஜனநாயக உணர்வு கொண்ட பாட்ரியாட், நியுஏஜ் போன்ற டெல்லிப் பத்திரிகைகள் நாட்டுக்கே அவமானம் என்று கவலையோடு கண்டித்து எழுதின.

மக்களின் கொந்தளிப்பு வெளிப்படாத நிலையில் நீதி தேவனும் ஓரஞ் சாய்ந்து விட்டான். ஆம். வெண்மணிச் சம்பவத்திற்கு காரணம் என்று சொல்லப்பட்ட நிலப்பிரபு - கோபால கிருஷ்ண நாயுடு வகையறாக்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் விடுதலை செய்யப்பட்டனர். நீதிமன்றத் தீர்ப்பு

“ Upon the consideration of the evidence on record the Judges felt constrained to hold that the prosecution had failed to bring home the guilt of any of them and consequently acquitted them. They said that the intrinsic infirmities in the prosecution evidence prevended them from convincting the persons who were probable innocene. -‘Hindu’

“பதிவான சாட்சியங்களைப் பரிசீலித்ததில் குற்றவாளிகள் மீது குற்றத்தை நிரூபிக்க வாதிகள் தரப்பில் (பிராசிகேஷன் தரப்பில்) தவறி விட்டதாக நீதிபதிகள் முடிவுக்கு வரவேண்டி இருப்பதாக உணர்கிறார்கள். இதன் காரணமாகப் பிரதிவாதிகள் அனைவரையும் விடுதலை செய்கிறோம். பிராசிகேஷன் தரப்பு சாட்சிகளில் உள்ளடங்கிய குறைபாடுகள் இருப்பதால் நிரபராதிகளாக உள்ள நபர்கள் தண்டிக்கப்பட்டு விடாமல் தடுக்கப்பட்டிருக்கிறோம்.

‘இந்து பத்திரிகை’


44 ஏழை உயிர்களின் மீது இதர மக்களுக்கு இரக்க குணம் ஏற்படாத நிலையில்- நீதிமன்றங்களிலும் - ஏழை மக்களுக்கு - தாழ்த்தப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்காத போது - நிலப்பிரபுக்களும், பிற்போக்காளர்களும், சாதி வெறியர்களும் - சரடு போடப்படாத திமிர்க் காளைகளாக நாட்டில் இன்னமும் திரிந்து வருகிறார்கள்.

விடுதலை விடுதலை விடுதலை
பறையருக்கும் இங்கு தீயர்
புலையருக்கும் விடுதலை
பரவரோடு குறவருக்கும்
மறவருக்கும் விடுதலை.

என்ற பாரதி விடுதலைக் கனவு கண்டார். அக் கனவுகள் இன்னும் நனவாகவில்லை. பாரதியின் கனவை நனவாக்கக் கங்கணம் கட்டியாக வேண்டும்.

தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் - இதரப் பகுதியினரை விட சாதி அமைப்பில் கொடிய ஓடுக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்ள். அவர்களின் உரிமையை நிலை நாட்டுவது ஜனநாயகத்தின் வலுவான அடித்தளமாகும்.

கிராமங்களின் அடித்தட்டில் வாழும் விவசாயத் தொழிலாளர்களிடையே - சாதி வேற்றுமை இல்லாமல் ஒற்றுமையை உருவாக்க வேண்டும். ஒன்றுபட்ட இயக்கமாக திரட்ட வேண்டும். வலியோர் இழைக்கும் கொடுமைகளை எதிர்த்து, எளியோர்களுக்குப் பாதுகாப்பாகவும் மக்களைத் திரட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

வலியோர் தம் ஆதிக்கமும், வன்முறையும் எந்த வழியில் வந்தாலும் அதனை எதிர்த்து குரல் கொடுக்கவும், மக்களை திரட்டவும் வேண்டும். அது உலகை மேலாண்மை செய்யத் துடிக்கும் அமெரிக்காவை எதிர்த்து என்றாலும் சரி. ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கும் பாப்பாபட்டி, கீரிப்பட்டி கொடுமையை எதிர்த்து என்றாலும் சரி. நாம் எதிர்க்க வேண்டும்.

வெங்கொடுமைக்கு பலியான வெண்மணித் தியாகிகள்

1. சுந்தரம் (45)
2. சரோஜா(12)
3. மாதாம்பாள்(25)
4. தங்கையன் (5)
5. பாப்பா (35)
6. சந்திரா (12)
7. ஆசைத் தம்பி (10)
8. வாசுகி (3)
9. சின்னப்பிள்ளை (28)
10. கருணாநிதி(12)
11. வாசுகி (5)
12. குஞ்சம்பாள் (35)
13. பூமயில் (16)
14. கருப்பாயி (35)
15. ராஞ்சியம்மாள் (16)
16. தாமோதரன் (1)
17. ஜெயம் (10)
18. கனகம்மாள் (25)
19. ராஜேந்திரன் (7)
20. சுப்பன் (70)
21. குப்பம்மாள் (35)
22. பாக்கியம் (35)
23. ஜோதி (10)
24. ரத்தினம் (35)
25. குருசாமி (15)
26. நடராசன் (5)
27. வீரம்மாள் (25)
28. பட்டு (46)
29. சண்முகம் (13)
30. முருகன் (40)
31. ஆச்சியம்மாள் (30)
32. நடராஜன் (10)
33. ஜெயம் (6)
34. செல்வி (3)
35. கருப்பாயி (50)
36. சேது (26)
37. நடராசன் (6)
38. அஞ்சலை (45)
39. ஆண்டாள் (20)
40. சீனிவாசன் (40)
41. காவிரி (50)
42. வேதவள்ளி (10)
43. குணசேகரன் (1)
44. ராணி (4)

Saturday, July 08, 2006


திராவிட இயக்கம் ஊட்டிய உணர்வுகள்
சுப.வீரபாண்டியன்
தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து பாராட்டுகளும், அவதூறுகளும் சேர்ந்தே வந்து கொண்டிருக்கின்றன. தி.மு.க. அணி பெற்ற வெற்றிக்குப் பாராட்டு, பதவிக்கும், புகழுக்கும் ஆசைப்பட்டுத் தேர்தல் அரசியலுக்குப் போய்விட்டதாக அவதூறு.தி.மு.க அணியின் வெற்றியில் என் பங்கு ஒன்றும் பெரியதில்லை என்பதையும், பல்லாயிரக்கணக்கான மக்களின் வாக்குகளை ஈர்த்துவிடக்கூடிய அளவிற்கு, எனக்குப் புகழோ, ஆற்றலோ, தனித்துவமோ இல்லை என்பதையும் நான் நன்கு அறிவேன்.ஒருமுறை கலைஞர் குறிப்பிட்டதைப் போல, "செய்ய வேண்டிய கடமையை, செய்ய வேண்டிய நேரத்தில் செய்தேன் என்னும் மனநிறைவு எனக்கு இப்போதும் இருக்கிறது.பொதுவாழ்வில் சில வேளைகளில், பொருத்த மற்ற பாராட்டுகள் வருவதைப் போல், பொருத்தமற்ற அவதூறுகளும் பரவத்தான் செய்யும். அவற்றைப் புறந்தள்ளுவதே நம் உடல் நலத்திற்கும், மனநலத்திற்கும் நல்லது. புறந்தள்ளி விட்டேன்.ஆனால் அடுத்து என்ன செய்யப் போகின்றீர்கள் என்னும் வினாவை எதிர்ப்படும் பலரும் கேட்கின்றனர். எனக்குள்ளும் அவ்வினா எழாமலில்லை.தமிழர் தேசிய இயக்கத்தை விட்டு விலகிவிட்ட நிலையில், தனியாக நிற்கின்றேன். தனிமரம் தோப்பாகாது என்பதையும் உணர்கின்றேன். எனவே ஏதாவது ஒரு கட்சி / இயக்கத்தில் இணைவது அல்லது புதிய அமைப்பை உருவாக்குவது என இரண்டிலொன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய சூழல் என் முன்னே உள்ளது.என்ன செய்யலாம்?இரண்டிலுமே எனக்குத் தயக்கம் உள்ளது. அல்லது இப்போதைக்கு இரண்டுமே வேண்டாம் என்று தோன்றுகிறது.ஒரு குறிப்பிட்ட காலத்திற்காவது, தனி ஆளாகவே நின்றுகொண்டு சில பணிகளைத் திட்டமிட்டுச் செய்யலாம் என்னும் எண்ணம் வலுப்பெறுகின்றது.அவற்றுள் முதல் பணியாக நான் கருதுவது, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, என் போன்றோரிடம் திராவிட இயக்கம் ஊட்டிய உணர்வுகளை, இன்றைய இளைய தலைமுறைக்கு ஊட்ட வேண்டும் என்பதே. அந்த நோக்கத்தை நெஞ்சில் நிறுத்தி, இளைஞர்களிடம் குறிப்பாக மாணவர்களிடம் செல்லவேண்டும் என்ற முனைப்பு என்னுள் கூடிக் கொண்டே இருக்கிறது. வரும் சூன் மாதம் முதல், என் பெரும்பகுதி நேரத்தை அதற்காகவே செலவிடுவது என் திட்டம். அந்தத் திசை நோக்கிய பயணத்தில், சில அடிகளை இப்போது வைத்திருக்கிறேன்.தமிழ் உணர்வு, சாதி எதிர்ப்பு, பகுத்தறிவு, பெண் விடுதலை ஆகிய நான்கு இலட்சியங்களை நோக்கி இளைஞர் படை ஒன்றைக் கட்ட முடியுமானால், அது என் வாழ்க்கையைப் பொருளுடையதாக ஆக்கும்.இன்னொரு பெரும்பணியும் நமக்கு முன்னால் இருப்பதாக உணர்கிறேன்.இன்று மலர்ந்துள்ள, கலைஞர் தலைமை யிலான தி.மு.க ஆட்சி, செயல்பாடுகளில் காட்டும் விரைவு நம்மை வியப்புக்குள்ளாக்குகின்றது.மலிவு விலையில் அரிசி, எளிய உழவர்களுக்கு நிலம், ஏழைக் குழந்தைகளுக்கு ஊட்ட உணவு, உழவர்சந்தை என மக்கள் நலம் நாடும் திட்டங்கள் ஒரு புறம். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், ஆலயங்களில் எவருக்கும் இனிப் பரிவட்டம் இல்லை போன்ற பகுத்தறிவுத் திட்டங்கள் மறுபுறம். தமிழ் இனி மேல் கட்டாயப்பாடம், மீண்டும் அதே இடத்தில் கண்ணகி சிலை எனத் தமிழ் மானம் காக்கும் திட்டங்கள் இன்னொரு புறம். எல்லாம் நெஞ்சில் இனிக்கின்றன.எனினும், இந்த ஆட்சியை எப்படியும் கவிழ்த்தே தீருவது, அதற்கு முதல்படியாகச் சட்டம் ஒழுங்கைச் சீர்குலைப்பது, கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்துவது என்று அ.தி.மு.க தன் பணிகளைத் தொடங்கியுள்ளது.பதவியை இழந்தவர்கள் பதறுவதும், அடாவடித் தனங்களின் மூலம் அதை மீண்டும் கைப்பற்றிவிட வேண்டும் என்று துடிப்பதும் உலக இயற்கைதான். ஆனாலும் இன்றைய எதிர்க்கட்சியின் பதற்றமும், துடிப்பும் அளவுக்கு மிகுதியாகவே உள்ளன. இந்தச் சூழலில், தேர்தலுக்கு வாக்குக் கேட்டதோடு நம் பணி முடிந்துவிட்டது என்று நாம் இருந்துவிட முடியாது.மக்கள் நலம் கருதும் ஆட்சியின் மாண்புகளை, மக்களிடம் சென்று எடுத்துரைக்க வேண்டிய இன்றியமையாத பணியும் இருக்கிறது நம் முன்னால்!அதையும் செய்தாக வேண்டும். அதனாலும் சில அவதூறுகள் எழும். எழட்டும்! கவனம் சிதறாமல் கடமைகள் ஆற்றுவோம். காலம் மற்றவற்றைப் பார்த்துக் கொள்ளும்.மூன்று தொலை பேசிகள்2006 மே 11 தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அனைத்தும் ஏறத்தாழ வெளிவந்துவிட்ட மாலை நேரத்தில் அந்த முதல் தொலைபேசி வந்தது. ஒரு மணி நேரத்துக்குப் பிறகு இன்னொன்றும், இரவு 10 மணியளவில் மற்றொன்றுமாக மொத்தம் மூன்று தொலைபேசிகள் வந்தன.மூன்று தொலைபேசிக் குரல்களும் வெவ்வேறானவையாக இருந்த போதிலும், பேசப்பட்டது ஒரே செய்தி பற்றித்தான். இன்னொரு ஒற்றுமை, மூவருமே தங்கள் பெயர்களைச் சொல்லவில்லை என்பது."காட்டுமன்னார்கோயில்ல ரவிக்குமார் ஜெயிச்சுட்டாரு... தெரியுமா?'' என்ற வினாவோடு முதல் தொலைபேசி தொடங்கியது. "அப்படியா, நீங்கள் யார்?'' என்றேன். அதற்கு விடை சொல்லாமல்,'' நீங்க எல்லாம் அங்க வந்து எதிர்த்துப் பேசினதுனாலதான் அவருக்குக் கூடுதல் ஓட்டு விழுந்திருக்கு'' என்றார் அவர். அடடா, நம் பேச்சுக்கு இப்படி ஒரு பயன்பாடு உள்ளது போலிருக்கிறதே என்று நினைத்துக் கொண்ட நான், "சரி, ரொம்ப மகிழ்ச்சி, வாழ்த்துகள்'' என்று கூறினேன்.இரண்டாவது தொலைபேசியை என்னால் காது கொடுத்துக் கேட்க முடியவில்லை. "டேய் நாயே....'' என்று தொடங்கி, ஏராளமான கெட்ட வார்த்தைகள் இடையிடையே வந்து விழுந்த சில நல்ல சொற்கள், "ரவிக்குமார்..... காட்டு மன்னார்குடி ... வெற்றி'' போன்றவை மட்டுமே. இப்போது இணைப்பை நான் துண்டித்துவிட்டேன்.இரவு வந்த தொலைபேசி, ஒரு வினாவும் விடையுமாக முடிந்து போனது. "தேர்தல்ல எங்க ரவிக்குமார் ஜெயிச்சு, ஒன் மூஞ்சியில கரியப் பூசிட்டாரே, எப்படித் தொடைச்சுக்கப் போறே?'' இது வினா."150க்கும் மேற்பட்ட தொகுதிகள்ல ஒங்க முகத்தில் பூசப்பட்ட கரிய நீங்க எப்படித் தொடைச்சுக்குவீங்களோ, அப்படித்தான்'' இது என் விடை.ரவிக்குமார் மீது எனக்குத் தனிப்பட்ட சினம் ஏதுமில்லை. தனிப்பட்ட நட்புக்கோ, தனிப் பட்ட பகைக்கோ அரசியலில் எப்போதும் இடமில்லை.இந்த மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் உழைத்த மாமனிதர் தந்தை பெரியாரைக் கொச்சைப்படுத்தும் வகையில், ரவிக்குமார் அவதூறுகளை அள்ளிவீசி வந்ததை அனைவரும் அறிவோம். அதன் எதிர்விளைவே என் போன்றவர்களின் எதிர்ப்பு.சட்டமன்ற உறுப்பினர் ஆகிவிட்ட, இக்காலகட்டத்திற்குப் பிறகாவது, பெரியார் குறித்த தன் பொய்களையும், புனைந்துரைகளையும் புறந்தள்ளிவிட்டுத் தன் தொகுதி மக்களின் நலப்பணிகளில் அவர் ஈடுபடுவாரெனில், நமக்கு மகிழ்ச்சியே!சட்டமன்றத்தில், ஈழத்தமிழ் மக்கள் குறித்தும், அயோத்திதாசப் பண்டிதர், சிலப் பதிகார மாதவி ஆகியோருக்குச் சிலை வைக்க வேண்டும் என்பது குறித்தும் அவர் பேசி யுள்ளது, பாராட்டத்தக்கதாக உள்ளது. இவ்வழியில் அவர் போக்குத் தொடரு மானால், அவர் கோரிக்கைகளுக்குத் துணை நிற்க நாமும் தயங்கமாட்டோம்.மீண்டும் சொல்கிறேன் தனிப்பட்ட நட்புக்கும், தனிப்பட்ட பகைக்கும் அரசியலில் இடமில்லை.அதே வேளையில், போயஸ் தோட்டத்தை நட்பாகவும், பெரியார் தொண்டர்களைப் பகையாகவும் அவரோ, அவர் நண்பர்களோ கருதுவார்களேயானால், அந்தத் தொலைபேசி நண்பர்களைப் பொறுத்துக் கொள்வதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை.