Thursday, December 31, 2009

பேராசிரியர் கல்யாணி நேர்காணல்

http://www.kalachuvadu.com/issue-120/page60.asp

மூடநம்பிக்கையின் முடைநாற்றம்

செத்துப் போன குரங்குக்கு சிவப்புத் துணி மரியாதையாம்!கம்யூனிஸ்ட் அமைச்சரின் கடவுள் பாசம்
திருவனந்தபுரம், டிச. 30_- கோயிலில் வாழ்ந்து செத்துப் போன குரங்கு ஒன்றுக்கு சிவப்புத்துணி போர்த்தி, இறுதி மரியாதை செலுத்தி தனது இந்துக் கடவுள் பாசத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் கேரளாவின் நீர்வளத்துறை அமைச்சர் என்.கே பிரேமச்சந்திரன்.
கேராளாவில் சாஸ்தம்கோட்டா என்ற இடத்தில் உள்ளது தரும சாஸ்தா கோயில். இங்கு ஏராளமான குரங்குகள் கூட்டம் கூட்டமாக வசித்து வருகின்றன. இதனால் இங்கு வரும் பக்தர்கள் பல்வேறு சிரமங்களுக்கும் உள்ளாகின்றனர். கோயிலுக்கு அருகில் உள்ள வீடுகளுக்குள்ளும் குரங்கு--கள் கூட்டம் கூட்டமாக படை எடுத்து பல்வேறு தொல்லைகள் கொடுத்து வந்தன. இதுகுறித்து 1980களில் அப்பகுதி மக்கள் கேரள உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இதனை அடுத்து அங்குள்ள குரங்குகளை உடனடி-யாக அப்-புறப்-படுத்துமாறு உயர்நீதிமன்றம் உத்தர-விட்டது. ஒரே ஒரு குரங்கைத் தவிர அனைத்துக் குரங்குகளும் அப்போது அங்கிருந்து வெளி-யேற்றப்-பட்டன. அந்த ஒரே ஒரு குரங்கு மட்டும் யாருக்கும் எவ்விதக் கெடுதலும் செய்யாமல் இருந்ததாம். பக்தர்களுக்கு தொல்லை கொடுக்கும் மற்ற குரங்குகளுடன், இந்தக் குரங்கு மட்டும் சண்டை போட்டு பக்தர்களை தொல்லையிலிருந்து தடுத்து வந்ததாம். இதனால் பக்தர்கள் மத்தியில் அந்தக் குரங்குக்கு மதிப்பும், மரியாதையும் அதிகரித்ததாம். இதனால் அந்தக் குரங்குக்கு சாயிப்பு என்று பெயரிட்டு பக்தர்கள் அழைத்து வந்தாக கூறப்-படுகிறது. அக்கோயில் உள்ள குரங்கு கூட்டத்துக்கு சாயிப்பு-தான் தலைவரைப் போல் செயல்பட்டு வந்ததாம்.
சமீபத்தில் அந்தக் குரங்கை மற்ற சில குரங்குகள் சண்டையிட்டு கடித்துக் குதறியதால் படுகாயமடைந்த சாயிப்பு குரங்கு பெரும் அவதிப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முன் தினம் அந்தக் குரங்கு இறந்து போனது.
சாயிப்பு-வின் சாவுச் செய்தி கேட்ட அப்பகுதி மக்கள் கோயிலில் கூடத் தொடங்கினர். கேரள மாநிலத்தின் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பிரேமச்சந்திரன், கொல்லம் மாவட்டம் குன்னாத்தூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் கோவூர் குஞ்சுமோன் ஆகியோரும் அங்கு விரைந்து வந்தனர். செத்துப் போன குரங்குவின் உடலுக்கு செங்கொடி போர்த்தி கேரளாவின் கம்யூனிஸ்ட் அமைச்சரும், அதே கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.-வும் இறுதி மரியாதை செலுத்தினாராம். இதிகாச ராமனுக்கு, அனுமான் குரங்கு உதவி செய்ததாகக் கூறி அதனை ஒட்டி பல்வேறு புளுகு மூட்டை-களையும் அவிழ்த்து வருகிறது இந்துத்-துவா கூட்டம். அதற்கு ஆமாம் சாமி போடும் விதமாக மார்க்சியத் தோழர்களும், செத்துப் போன குரங்குக்கு செங்கொடி போர்த்தி இந்துக் கடவுள் பாசத்தை வெளிப்படுத்தி இருப்பதை என்னவென்று சொல்வது? மார்க்சியம் அவர்களுக்கு கற்றுக் கொடுத்-தது இந்த இந்து மத நம்பிக்-கையைத்-தானா?

பூணூல் பாசம்

ஆந்திர மாநிலத்தின் ஆளுநராகயிருந்த என்.டி. திவாரி ராஜினாமா செய்ய வைக்கப்பட்டு, கூடுதல் பொறுப்பாக சட்டீஸ்கர் மாநில ஆளுநர் ஈ.எஸ்.எல். நரசிம்மன் நியமிக்கப்பட்-டுள்ளார்.
இதுபற்றி தினமணி (29.12.2009, பக்கம் 9) செய்-தியை எப்படி வெளியிடு-கிறது?
ஆந்திரத்தில் ஆளுந-ராகப் பதவி வகித்த நாரா-யண் திவாரி உடல்நலக் குறைவு காரணமாக திடீ ரென விலக நேர்ந்ததால் ஆந்திர மாநில ஆளுநர் பொறுப்பையும் சேர்த்து வகிக்குமாறு நரசிம்மன் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்.
இதுதான் தினமணி வெளியிட்ட செய்தி.
எப்படி செய்தி? புரி-கிறதா? உடல்நலம் சரியில் லாமல் திவாரி பதவி விலக நேர்ந்ததாம்!
தினமணி என்னும் பூனை கண்களை மூடிக்-கொண்டு விட்டது. அதனால் அதன் கண்களுக்குப் பூலோகமே இருண்டு விட்டதாகத் தெரிகிறது. இந்தத் தினமணி பூனை தன் கண்களை மூடிக்கொண்டது மட்டுமல்ல, திறந்திருக்கும் பொதுமக்களின் கண்-களிலும், வாசகர்களின் கண்-களிலும்கூட மிளகாய்ப் பொடியைத் தூவப் பார்க்-கிறதே _ அதனை நினைத்-தால் விலா நோக சிரிப்பு-தான் வெடித்துக் கிளம்பு-கிறது!
86 வயது நிறைந்த என்.டி. திவாரியின் தேவ-நாதன் லீலைகள் விலாவாரி-யாக ஏடுகளில் வெளிவந்-துள்ளன; தொலைக்காட்சி-களும் ஒளிபரப்பி மானத்தை வாங்குகின்றன.
காஞ்சிபுரம் மச்சேஸ்-வரன் கோயில் அர்ச்சகன் தேவநாதனின் கோயில் கர்ப்பக் கிரக (ஃபுளு பிலிம்) சேட்டைகள் _ லீலைகள்-பற்றி பொதுமக்கள் காரித் துப்புகின்றனர். காஞ்சிபுரம் நீதிமன்றத்துக்கு வந்த தேவநாதனுக்கு தமிழினப் பெண்மணிகள் துடைப்பத்-தாலும், காலணிகளாலும் அபிஷேக ஆராதனைகள் (கோயில் அர்ச்சகர் அல்லவா!) செய்தனர்.
அந்தச் செய்தி ஆடி அடங்குவதற்குள் 86 வயதான ஒரு மாநில ஆளு-நரே மன்மத லீலைகளில் அன்றாடம் குளியலாடினார், நீச்சலடித்தார் என்ற செய்தி அங்கு இங்கு எனாதபடி எங்கு பார்த்தாலும் பிர-வாகித்துவிட்டது.
ஒரு புரோக்கர் ஒரு ஆளுநரை வெளியேற்றி-னார் என்பது இதுவரை கேள்விப்படாத ஒன்றே!
இவ்வளவு நடந்திருக்-கிறது _ ஊர் உலகமே சிரிக்-கிறது. ஆனால், தினமணி-யின் வைத்தியநாதய்யரோ உடல்நலக் குறைவு காரண-மாகப் பதவி விலக நேர்ந்தது என்று செய்தி வெளியிடு-கிறார்.
இதன்மூலம் தினமணி-யின் நம்பகத்தன்மையை இதுவரை தெரிந்து-கொள்-ளாதவர்களும் இப்பொழுது தெரிந்து கொண்டுவிட்டனர். தினமணி இப்படி ஏன் மூடி மறைக்கிறது?
காரணம் என்ன தெரி-யுமா? சம்பந்தப்பட்டவர் திவாரி என்பதுதான்.
ஹி... ஹி.... ஹி..... ஹி..... பூணூல் பாசம் எவ்வளவு பொல்லாதது பார்த்தீர்களா? -
மயிலாடன்
- நன்றி விடுதலை