Wednesday, February 24, 2016

விஜயகாந்த்துடன் அமெரிக்க தூதர் சந்திப்பு

சென்னையில் உள்ள இந்தியாவிற்கான அமெரிக்கா துணை தூதர் பிலிப் மின், தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சென்று சந்தித்துப் பேசினார்.
கோயம்பேட்டில் உள்ள, தேமுதிக தலைமை அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. சுமார் 20 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின் போது அமெரிக்க துணை தூதரக அதிகாரிகள், தேமுதிகவின் சுதிஷ், சந்திரகுமார், பார்த்தசாரதி ஆகியோர் உடனிருந்தனர்.

மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக, அமெரிக்க துணை தூதரக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தேர்தலையொட்டி, அரசியல் கட்சி தலைவர்களை சந்திப்ப‌து வாடிக்கை என்றும் அமெரிக்க தூதர அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

பாபா அணு ஆராய்ச்சி மையத்திற்கு புதிய இயக்குநர்

பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் அணு உலைத் திட்டக் குழுவின் இணை இயக்குநரும் பிரபல விஞ்ஞானியுமான திரு. கே. என் வியாஸ் இன்று மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக பொறுப்பேற்றுக் கொண்டார். மத்திய அரசின் அணுசக்தித் துறை செயலாளரும் அணுசக்தி ஆணையத்தின் தலைவருமான டாக்டர் சேகர் பாசுவிடமிருந்து இந்தப் பொறுப்பை அவர் பெற்றுக் கொண்டார்.
வியாஸ் பாபா அணு ஆராய்ச்சி மைய பயிற்சிப் பள்ளியின் 22 -வது குழு பட்டதாரி ஆவார். பின்னர் அவர் இந்த மையத்தின் அணு உலைப் பொறியியல் துறையின் எரிபொருள் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு பிரிவில் பணியில் சேர்ந்தார். கடந்த 36 ஆண்டுகளில் திரு. வியாஸ் அணு உலை எரிபொருள் வடிவமைப்பு மற்றும் பகுப்பாய்வில் நீண்ட அனுபவத்தைப் பெற்றார். அதனை அடுத்து அணு உலை திட்டப் பிரிவின் தலைவராக அணு உலை அமைப்பு முறைகளின் வடிவமைப்பு மற்றும் பகுப்பாய்வு அனுபவத்தையும் அவர் பெற்றுள்ளார்.

தமிழிசையை சந்தித்த அமெரிக்க தூதர்

மரியாதை நிமித்தமாக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களை அமெரிக்கன் கவுன்சில் ஜெனரல் பிலிப்ஸ் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.