Monday, December 14, 2015

சுற்றுலா சென்ற போது விபத்து - 4 கல்லூரி மாணவர்கள் பலி.

பெங்களூரு கே.ஆர்.புறம் சிட்டி கல்லூரி மற்றும் சைதன்யா கல்லூரியை சேர்ந்த எட்டு மாணவர்கள் (13-12-2015) கல்லூரியை புறக்கணித்து சொகுசு காரில் நந்தி பெட்டா என்ற இடத்திற்கு சுற்றுலா சென்றனர். நந்தி பெட்டா செல்லும் வழியில் தேவனஹள்ளி என்ற இடத்தில் அவர்கள் வாகனம் மிக வேகமாக சென்றுகொண்டிருந்த போது வாகனம் கட்டுபாட்டை இழந்து ஒரு மரத்தின் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிர் இழந்தனர். மேலும் 6 பேரை வைட் பீல்ட் பகுதியில் உள்ள சத்ய சாய் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த போது அங்கு சிகிச்சை பயனளிக்காமல் இருவர் உயிரிழந்தனர். மேலும் தற்பொழுது நான்கு பேருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. 

விபத்தில் உயிரிழந்த மாணவர்களில் ஒருவரான கிரண் குமார் என்ற மாணவன் 13-12-2015 அன்று காலையில் கல்லூரிக்கு வரும் போது தனது 3 சக மாணவர்களை அழைத்துக்கொண்டு காரில் கல்லூரிக்கு வந்துள்ளான். கே.ஆர். புறம் சிட்டி கல்லூரியில் மாணவர்கள் காரில் வர தடைவிதிக்க பட்டுள்ளது. அதனால் காருடன் கல்லூரிக்குள் வந்த மாணவர்களை காவலாளி தடுத்து நிறுத்தி காரை வெளியே விட்டுவிட்டு வர வலியுறுத்தியுள்ளார்.
காருடன் கல்லூரிக்குள் நுழைய அனுமதி மறுக்கபட்டதால் அந்த நான்கு பேரும் சுற்றுலா செல்ல முடிவெடுத்தனர். இதனிடையே அவர்கள் சநந்தி பெட்டா செல்லும் வழியில் சைதன்யா கல்லூரிக்கு சென்று அங்கு வகுப்பில் இருந்த நான்கு மாணவர்களை அழைத்துக்கொண்டு செல்லும் போது ஏற்பட்ட விபத்தால் தற்பொழுது நான்கு மாணவர்கள் உயிர் இழந்துள்ளனர்.