Friday, November 16, 2007

தமிழக காங்கிரஸ் பின்னணியில் "அம்சா"

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் படுகொலைக்கு தமிழக முதல்வர் இரங்கல் தெரிவித்தமைக்கு பல நாட்களுக்குப் பின்னர் "திடீரென" கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியதன் பின்னணியில் இருப்பது சென்னையில் உள்ள சிறிலங்கா கிளைத் தூதுவர் அம்சாதான் என்பது அம்பலமாகியுள்ளது.

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளை நவம்பர் 2 ஆம் நாள் சிறிலங்கா வான்படையினர் குண்டுவீசி படுகொலை செய்தனர்.

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் படுகொலைக்கு நவம்பர் 3 ஆம் நாள் தமிழக முதல்வர் கலைஞர் "செல்வா எங்கு சென்றாய்?" என்ற இரங்கல் கவிதையை மட்டும் வெளியிட்டார். மறுநாள் 3 ஆம் நாள் பின்னிரவு இக்கவிதைக்கு கண்டனம் தெரிவித்து ஊடக நிறுவனங்களுக்கு ஜெயலலிதா அறிக்கையை அனுப்பினார். அதற்கு நவம்பர் 4 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை முதல்வர் கலைஞர் "என் உடம்பில் ஓடுவதும் தமிழ் இரத்தம்" என்று கூறினார்.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர்களான வீரப்ப மொய்லி, ஜெயந்தி நடராஜன் ஆகியோரும் கூட "தமிழக முதல்வர் கருணாநிதியின் தனிப்பட்ட கருத்து" என்று கூறியிருந்தனர்.

தமிழ்நாடு முழுவதும் பட்டி தொட்டியெங்கும் உணர்வெழுச்சியோடு வீரவணக்கக் கூட்டங்கள்- இரங்கல் ஊர்வலங்கள் நடைபெற்று வந்தன.

சிங்கள ஊடகங்கள் கூட இந்த உணர்வெழுச்சியை 1980 களோடு ஒப்பிட்டு எழுதியது.

இந்நிலையில்தான் வேலூர் சட்டமன்றத் தொகுதியின் காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன், வேலூரில் விடுதலைச் சிறுத்தைகளின் வீரவணக்க நிகழ்வை "போராடி" தடுத்தார்.

இந்நிலையில் கடந்த 13 ஆம் நாள் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் ஒன்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் கூட்டப்பட்டு அதில் "முதல்வர் இரங்கல் தெரிவித்தமைக்காக இரத்தக் கண்ணீர் வடிக்கிறோம்" என்று தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்.

காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ஞானசேகரனுக்கு எப்பொழுதுமே புலிகள் விடயத்தில் "திடீர்" ஞானோதயம் பிறப்பது வாடிக்கையாகிவிட்டது!

தமிழகத்தில் தமிழீழத் தமிழர்கள் மீதான இயல்பான ஆதரவு நிலையை முடக்கிவிட தமிழக மீனவர்களை சுட்டுப் படுகொலை செய்து கடத்தி "றோ" நாடகம் ஆடியதை நாம் முன்னரே சுட்டிக் காட்டியிருந்தோம்.

அந்தக் கட்டுரையிலும்

"தமிழக மீனவர்களை புலிகள் கடத்திச் சென்றதாக ஒரு நாடகத்தை அரங்கேற்றி விட்டு அரசியல் ரீதியாக தமிழக சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சியின் ஞானசேகரனைக் கொண்டு கடத்தியது புலிகள்தான், சுட்டது புலிகள் என்று தெடர்ச்சியாக கேட்க வைத்துவிட்டு அதன் மூலம் கருணாநிதிக்கு ஒரு நெருக்கடியை உருவாக்கியது இந்திய உளவுத்துறை. (ஞானசேகரனுக்கு நெருங்கிய நண்பர் யார் தெரியுமா? இராமநாதபுரம் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ஹசன் அலி. ஹசன் அலியைப் பற்றி நக்கீரன் வாரமிருமுறை இதழ் வெளியிட்ட விபரம் என்னவெனில் "மகிந்தவுக்கு நெருக்கமானவர். ஈழத் தமிழ் அகதிகளை மிகக் கேவலமாக நடத்தியவர் என்பதுதான்)" என்று பதிவு செய்திருந்தோம்.

அதேபோல் மீனவர்கள் கடத்தலில் கண்ணை மூடிக்கொண்டு பொய்யை பலமுறை திரும்பத் திரும்பக் கூறிவந்தது சென்னை சிறிலங்கா கிளைத் தூதரகத்தில் உள்ள "அம்சா" தான்.

தமிழர்களே!

இதே வேலூர் ஞானசேகரன் தான் இப்போதும் வீரவணக்க நிகழ்வுகளைத் தடுத்திருக்கிறார் என்பது மட்டுமல்ல...

சிறிலங்கா அரச தலைவர் மகிந்தவுக்கு நெருக்கமான-

ஈழத் தமிழ் அகதிகளை மிகக் கேவலமாக நடத்திய

அந்த

இராமதநாதபுரம் காங்கிரஸ் சட்டப் பேரவையின் உறுப்பினர் ஹசன் அலியும் "இரத்தக் கண்ணீர் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட" காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார் என்பதும் மட்டுமல்ல

அவர் என்ன பேசினார் என்பதையும் நக்கீரன் இதழின் இணையதளம் (17.11.07) பதிவு செய்துள்ளது.

"கூட்டணிக் குழப்பம் காங்கிரசின் இரத்தக் கண்ணீர்- கலைஞர் ஆவேசம்- சோனியா ரியாக்சன்" என்ற பகுதியில்,

"இராமநாதபுரம் எம்.எல்.ஏ.ஹசன் அலி பேசுறப்ப, என் தொகுதியில விடுதலைப் புலிகள் சர்வ சாதாரணமாக நடமாடுறதைப் பார்க்குறேன். அ.தி.மு.க.வோடு கூட்டணி இருந்தா இந்த நிலைமை இருக்காதுன்னு நம்ம கட்சிக்காரங்க வெளிப்படையாகவே சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க" என்று கூறியிருக்கிறார்.

ஓ! அவரது தொகுதியில் "புலிகள் சர்வ சாதாரணமாக நடமாடுகிறார்களாம்"- அப்படியானால் ஏன் வாய்மூடி மௌனியாக இத்தனை நாள் இருந்தாராம்?

"தமிழகத்தில் விடுதலைப் புலிகள் ஊடுருவல்- இதோ சாட்சி" என்று புகைப்படம் எடுத்து கலைஞர் ஆட்சியை கவிழ்த்து விட்டிருக்கலாமே!

கலைஞர் இரங்கல் தெரிவித்த பின்னர்-

தமிழகம் கொந்தளிப்பான நிலைக்கு வந்த பின்னர்தான்

ஞானசேகரன்களுக்கும் ஹசன் அலிகளுக்கும் "புலி ஞானோயதம்" வருகிறதாம்!

"ஞானோயதத்தை" எந்த சக்தியிடமிருந்து பெற்றிருக்க வேண்டும் இந்த ஞானசேகரன்கள்!

அந்த சக்தி இதுதான்

"தமிழ்ச்செல்வன் படுகொலையைத் தொடர்ந்து தமிழகத் தலைவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்திகளை வெளியிட வேண்டாம் என்று தமிழ்நாட்டின் அனைத்து முன்னணி ஊடகங்களையும் தொடர்பு கொண்டார் ஒருவர்- அதற்கு அவர் கூறிய காரணம் "தடை செய்யப்பட்ட இயக்க"த்தின் தலைவர் என்பதாம்."

அந்த நபருக்கு அப்படி என்ன அக்கறை?

தமிழகமே தமிழ்ச்செல்வன் படுகொலைத் துயரில் மூழ்கியிருக்கும் போது தமிழ்நாட்டின் தலைநகரத்தில் உட்கார்ந்து கொண்டு தங்களுக்கு "அடிமைச் சேவகம்" செய்யும் ஞானசேகரன்களுக்கும் ஹசன் அலிகளுக்கும் "தீபாவளி இனிப்பு" அனுப்பிய-

அந்த நபருக்கு வேறு என்ன வேலை?

ஆம்

சென்னையில் உள்ள சிறிலங்கா கிளைத் தூதரகத்தில் உட்கார்ந்து கொண்டு இதனைச் செய்யாமல் வேறு எதனைத்தான் செய்வார் அந்த "அம்சா"!

சரியா?

காந்தியார் அவர்களையே படுகொலை செய்த கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தனரே- அவர்களைப் பார்ப்பதே பாவம் என்றா கண்களை மூடிக்கொண்டு விட்டனர்?

நாகரிகம் கருதி பல சந்தர்ப்பங்களில் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்வதில்லையா?

பிரதமர் இந்திரா காந்தியைக் கொன்றவர்கள் என்று கூறி ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தையே தீண்டத்தகாத பட்டியலில் வைக்கவில்லையே!

ராஜீவ் கொலையையும், இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் 20 ஆண்டுகளாக நொடிதொறும் அனுபவிக்கும் வாழ்க்கைத் துயரத்தையும் ஒன்றாகவே காங்கிரஸ் கட்சியினர் பார்த்தால் அது சரியா?