Tuesday, September 22, 2015

ஜெனிவாவில் தமிழர்கள் போராட்டம்

தமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஜெனீவா ஐ.நா முன்றலில் புலம்பெயர் தமிழ்மக்களின் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

தமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஜெனீவா ஐ.நா முன்றலில் புலம்பெயர் தமிழ்மக்களின் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் தமிழக உணர்வாளர்கள் பங்கெடுத்துள்ளனர்.

ஐ.நா மனித உரிமைச்சபையின் முப்பதாவது கூட்டத் தொடரில் சிறிலங்கா விவகாரம் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ள நிலையில் இக்கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

இந்த போராட்டத்தில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு. திருமுருகன் காந்தி மற்றும் இயக்குனர் திரு.வ.கௌதமன் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் பேராசிரியர் திரு. கல்யாணசுந்தரம் ஆகியோர் பங்கெடுத்துள்ளனர்.

தமிழினப் படுகொலையாளிகளை அனைத்துலக குற்றவியில் நீதீமன்றத்திடம் பாரப்படுத்துமாறு ஓரு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் கையொப்பமிட்டுள்ள நிலையில் பல்லாயிரக்கணக்காக மக்கள் ஜெனீவாவில் அணிதிரண்டுள்னர் என்பது குறிப்பிடதக்கது 

மது பாட்டில் விற்ற பெண்ணை கைது செய்ய கோரி சாலை மறியல்

ஏற்காட்டில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கீரைகாடு கிராமம். இந்த கிராமத்தில் பெட்டிக்கடையில் அனுமதியின்றி மது பாட்டில் வைத்து விற்பணை செய்ததாக பலமுறை பொதுமக்கள் சார்பில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறையினரிடம் கேட்டபோது நாங்கள் ஆய்வு நடத்தியபோது எதுவும் சிக்கவில்லை என்றும்,  ஆதாரத்துடன் புகார் கொடுங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது. 


இதையடுத்து மது விற்றதாக அறிந்த பொதுமக்கள் அந்த பெட்டிக்கடையில் இருந்த 200க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்து, இரவு 9மணி முதல் சாலை மறியலில் ஈடுபட்டனர். பேலீசார் சமரசம் செய்தும் அவர்கள் கலைவதாக இல்லை. மறியலின் போது  அப்பகுதியில் மழை பேய்த பொதும், மதுபானம் விற்ற பெண்ணை கைது செய்யும் வரையில் தாங்கள் சமரசம் ஆவதாக இல்லை என அவர்கள் தெரிவித்து மழையையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சுபிக்சா உரிமையாளரின் முன் ஜாமின் மனு தள்ளுபடி

அதிக வட்டி தருவதாக 900 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்த நிதி நிறுவன அதிபர் ஆர்.சுப்ரமணியத்தின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சென்னையை சேர்ந்த விஸ்வபிரியா முதலீட்டு நிறுவனம் அதிக வட்டி தருவதாக உத்தரவாதம் அளித்து ஆயிரக்கணக்கான பொதுமக்களிடமிருந்து 900 கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடுகளை பெற்று ஏமாற்றியதாக நிறுவனங்களின் பதிவாளருக்கு கடந்த 2013ஆம் ஆண்டு புகாரளிக்கப்பட்டது. அதேபோல சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசாரிடமும் பணத்தை பறிகொடுத்த பொதுமக்கள் புகாரளித்தனர். 18 மாதங்களுக்கு பிறகு ஒரு பெண் உள்ளிட்ட 6 நிர்வாகிகள் காவல்துறையால் கைது செய்யப்பட்டு, பின்னர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 8-ஆம் தேதி ஜாமின் பெற்றனர்.

இந்நிலையில், விஸ்வப்பிரியா, சுபிக்ஷா உள்ளிட்ட 49 நிறுவனங்களை தோற்றுவித்து தலைமறைவாகியுள்ள ஆர்.சுப்ரமணியம் முன் ஜாமின் கோரி வழக்கு தொடர்ந்தார். அவரது கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என வேதாந்தகுமார் என்ற முதலீட்டாளர் இணைப்பு மனுத்தாக்கல் செய்தார். வழக்கு விசாரணையின்போது, வேதாந்தகுமார் மற்றும் காவல்துறையில் சுப்ரமணியத்துக்கு முன் ஜாமின் கொடுக்கக்கூடாது என்றும், கைது செய்து விசாரித்தால் தான் முழுமையான தகவல்கள் கிடைக்கும் என்றும் வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதி வி.ராமசுப்ரமணியன், முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.