Friday, October 24, 2008

இத்தாலியில் ஈழத்தமிழர் ஆதரவு பேரணி

இத்தாலியில் நேற்று நடைபெற்ற மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான இத்தாலி வாழ் தமிழர்கள் பங்கேற்றுள்ளனர்.

இத்தாலியில் உள்ள பலெர்மோவில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற இந்த மாபெரும் கவனயீர்ப்பு பேரணியினை இத்தாலி தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாடு செய்திருந்தது.

பலெர்மோ மத்திய பகுதியில் அமைந்துள்ள பியாட்சா பொலித்தியாமத்தில் இருந்து முற்பகல் 10:30 நிமிடத்துக்கு தொடங்கிய பேரணி, இத்தாலி உள்நாட்டு அமைச்சினை நோக்கி சென்றது.



தமிழர் தாயகம் மீதான சிறிலங்கா அரசின் இனவாதப்போரை நிறுத்துமாறும்-

இடம்பெயர்ந்த மக்களுக்கான உணவையும் மனிதாபிமான உதவிகளையும் வழங்குமாறும்-

தன்னார்வத்தொண்டு நிறுவனங்களின் பணிகளை தடையில்லாது மேற்கொள்ள அனுமதியளிக்குமாறும்-

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்குமாறும்

கோரிக்கை விடுத்து இந்த பேரணி நடைபெற்றது.




சிறிலங்கா அரசுக்கு எதிரான கண்டனக்குரல்களை எழுப்பியும் தங்கள் உணர்வலைகளை வெளிப்படுத்தியும் மக்கள் உணர்வுபூர்வமாக பேரணியில் பங்கேற்றனர்.

நிகழ்வின் இறுதியில் கோரிக்கைகள் அடங்கிய மனுவினை இத்தாலி உள்நாட்டு அமைச்சின் அலுவலகத்தில் கையளித்தனர்.

நன்றி / புதினம்

ஈழப்போர்களத்தில் செப்ரெம்பர் மாதம் வரை


தமிழர்களுக்கு எதிரான போரில் சிறிலங்கா படையினர் இந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் வரை மொத்தம் 1,099 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 7 ஆயிரம் படையினர் படுகாயமடைந்துள்ளதாகவும் சிறிலங்கா படைத்தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இத்தகவலை பாதுகாப்பு பக்கம் என்ற படை ஆய்வு ஊடகம் வெளியிட்டுள்ளது.

அதில் இடம்பெற்றுள்ள தகவல்கள்:


செப்ரெம்பர் மாதம் வரையான 9 மாதங்களில் 1,099 படையினர் போரில் கொல்லப்பட்டனர். 7,000 படையினர் காயமடைந்துள்ளனர்.


செப்ரெம்பரில் 200 படையினர் கொல்லப்பட்டனர். 997 படையினர் காயமடைந்துள்ளனர்.

சிறிலங்கா படைத்தளபதிகளைப் பொறுத்த வரை விடுதலைப் புலிகள் தம்மிடம் அடைக்கலமடைவார்கள் என்று எதிர்பார்க்கின்றனர்.

ஆனால், விடுதலைப் புலிகள் தமது போராளிகள் கொமாண்டோக்களைக் கொண்டு மிக மோசமான தாக்குதலைத்தான் நடத்துவார்கள். அதில் அவர்கள் ஆயிரக்கணக்கானவர்களை கொல்வார்கள் என்று எதிர்பார்த்தனர்.

காங்கேசன்துறையில் விடுதலைப் புலிகள் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அதில் இரு கப்பல்கள் சேதமாகியுள்ளன.

இத்தாக்குதலில் விடுதலைப் புலிகளின் முதனிலை தளபதி நிலையினர் கரும்புலிகளாக செயற்பட்டனர்.

அக்கராயனில் 21 ஆம் நாள் படையினர் நடத்திய தாக்குதலுக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் படையினர் 33 பேர் கொல்லப்பட்டனர்.

இது விடுதலைப் புலிகள் காட்டுகின்ற கடுமையான பலமான எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றது.

இப்போது பெய்கின்ற கடும் மழை படையினரின் ஊர்திகளின் பயணங்களை பலவீனப்படுத்தியுள்ளதுடன் படையினரின் வழங்கலைப் பாதித்துள்ளது.

கிளிநொச்சிக்கு சில கிலோ மீற்றர்கள் தொலைவில் சிறிலங்கா படையினர் சிலர் நிற்கின்றனர். ஆனால் பின்னாள் 10 முதல் 15 கிலோமீற்றர்கள் தொலைவில் படையினர் மழை நெருக்கடிக்குள் சிக்கியுள்ளனர் என பாதுகாப்பு பக்கம் தெரிவித்துள்ளதாக அனைத்துலக படைத்துறை ஆய்வு ஊடகம் தெரிவித்துள்ளது.