Saturday, November 08, 2008

மும்பையில் நடைபெற்ற ஈழத்தமிழர் ஆதரவு பட்டினிப்போராட்டம்

கடந்த அறுபது ஆண்டு காலமாக தொடர்ந்து சிங்கள இனவெறி அரசினால் பாதிக்கப் பட்டு, உரிமை மற்றும் உடமை இழந்து தவிக்கும் ஈழத்தமிழர்களின் மீது இராணுவ அடக்கு முறைகளைக் கையாளும் இலங்கை அரசின் நடவடிக்கைகளை நிறுத்தக் கோரியும்,இந்திய அரசு உடனடியாக தலையிட்டு இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு பாது காப்பு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியதை வலியுறுத்தியும்
மகாராஷ்ட்ரா மாநிலம் தானே பகுதியில் அடையாள உண்ணாவிரதம் தானே தமிழ் மன்றத்தின் சார்பில் நடைபெற்றது.
உண்ணாவிரத்தை தானே பகுதி தேசிய வாத கங்கிரசின் தலைவரும் மராத்திய மாநில மேலவை உறுப்பினருமான திரு ஜீதேந்திர அவாட் துவக்கி வைத்தார். முன்னதாக அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். உண்ணா நோன்பு நிகழ்வில் தானே தமிழ் மன்ற நிர்வாகிகள் ஏ. சித்தார்த்தன், பி.ஒய்.மணி, ஜாகிர் உசேன், ராஜா பால், தமிழ் இலெமுரியா ஆசிரியர் சு. குமணராசன், திமு.க செயலாளர்கள் த.மு.பொற்கோ, பொ. அப்பாதுரை, மராத்திய மாநில எழுத்தாளர் மன்ற தலைவர் பேராசிரியர் சமீரா மீரான், கொ. வள்ளுவன், ஆந்திர மகா சபை வி.ராவ், திருவள்ளுவர் மன்ற அமைப்பாளர் இராதகிருஷ்ணன், திராவிடர் கழக செயலாளர் பெ.கணேசன், தமிழ் காப்போம் இராஜேந்திரன் , பால்வண்ணன், மனித உரிமை இயக்க அமைப்பாளர் சங்கர் திராவிட், சிட்டிசன் பாரம் தலைவர் எஸ்.ஏ.சுந்தர், விடுதலை சிறுத்தைகள் இயக்க கு.இராஜ, துரை, சாத்தரசன் பட்டி சேசுராசு, ஆதி திராவிடர் மகாஜன சங்க தலைவர் அசோக் குமார், லாரன்ஸ், தானே தி.மு.க செயலாளார் கி.தனுஷ்கோடி, தமிழர் தேசிய இயக்க நாடோடித் தமிழன், திருமதி நங்கை குமணராசன், லிட்டில் பிளவர் ஆங்கில பள்ளி முதல்வர் திருமதி அமலா ஸ்டான்லி, குண சுந்தரி சித்தார்த்தன் தானே அலெக்சாண்டர் உட்பட நூற்றுக் கணக்கானோர் பங்கேற்றனர்.
ஈழத்தமிழர்களை ஆதரித்து நடை பெற்ற இப்போராட்டத்தை ஆதரத்து முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் மனொஜ் சிந்தே, காங்கிரஸ் தலைவர் பாலகிருஷ்ண புர்னேகர் ஆகியோர் உரையாற்றினர். ஈழத்தமிழர் வரலாறு மற்றும் சிங்கள அரசின் தொடர்ந்த கொடுமகளை விளக்கி சு. குமணராசன், த.மு.பொற்கோ, ஜாகி உசேன், வெ.சித்தார்த்தன், எஸ்.ஏ.சுந்தர், அமலா ஸ்டான்லி ஆகியோர் உரையாற்றினர்.
இதற்கிடையில் ஈழத்தமிழர் பிரச்சினையில் சரியான அணுகுமுறையை மேற்கொள்வதை வலியுறுத்தியும் , இலங்கை அரசுக்கு இராணுவ உதவி அளிப்பதை நிறுத்தக் கோரியும் பிரதம அமைச்சருக்கு மனு ஒன்றும் தானே மாவட்ட ஆட்சியர் திரு எ.எல்.ஜாங்கிட் மூலம் கொடுக்கப் பட்டது. இம்மனுவை த.மு.பொற்கோ, சு.குமணராசன், அமலா ஸ்டான்லி, வெ.சித்தார்த்தன், ராஜாபால் மற்றும் ஜாகிர் உசேன் ஆகியோர் கலெக்டரை நேரில் சந்த்தித்து, நிலைமைகளை விளக்கி அளித்தனர்.
பட்டினி நோன்பை தானே சட்டமன்ற உறுப்பினரும் சிவசேனைத் தலைவருமான ஏக்நாத் சிந்தே முடித்து வைத்தார். உண்ணாநோன்பில் பங்கேறற அனைவருக்கும்பழச்சாறு வழங்கினார். இலங்கையில் நடைபெறும் கொடுமைகளைக் கண்டித்து நடைபெற்ற இப்போராட்டத்தை தி.மு.க. விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம், மனித நேய இயக்கம், காங்கிரஸ் கட்சி, தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, மற்றும் அனைத்து தமிழ் அமைப்புகள் என அனவரும் ஒருமித்து ஆதரவு வழங்கியிருப்பது மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி,
தானே தமிழ் மன்றம்.