Sunday, December 13, 2009

உருத்திரகுமாரனை கைது செய்ய அமெரிக்கா கோரும் `சாட்சியங்கள்` மற்றும் புலனாய்வுத் தகவல்களை இலங்கை அரசு பரிமாறத் தயார்

உருத்திரகுமாரனை கைது செய்ய அமெரிக்கா கோரும் `சாட்சியங்கள்` மற்றும் புலனாய்வுத் தகவல்களை இலங்கை அரசு பரிமாறத் தயார்




புலம்பெயர் புலிகளின் தலைவர் விஸ்வநாதன் உருத்திரகுமாரனை கைது செய்ய அமெரிக்கா கோரும் `சாட்சியங்கள்` மற்றும் புலனாய்வு தகவல்களை இலங்கை அரசு பரிமாறத் தயாராக இருப்பதாக அமைச்சரும், பாதுகாப்புப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வசிக்கும் விஸ்வநாதன் உருத்திரகுமாரனுக்கு எதிராக எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுப்பதற்கு, அவர் அமெரிக்க மண்ணில் எவ்வித குற்றச்சாட்டுக்களுக்கும் உள்ளாகவில்லையென இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் அமெரிக்காவின் தென்னாசிய மற்றும் மத்திய ஆசியாவுக்கான உதவி வெளிவிவகார அமைச்சர் றொபேட் ஓ பிளேக் தெரிவித்திருந்தார்.

அமெரிக்க நிர்வாகம் புலி அமைப்பின் பல செயற்பாட்டாளர்களை கைது செய்து அவர்களுக்கு எதிராக, போதிய சாட்சியங்கள் இருந்தமையினால், சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது. அமெரிக்க நீதிமன்றத்தினால் அவர்களுக்கு தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா கோரும் போதிய `சாட்சியங்கள்` மற்றும் புலனாய்வுத் தகவல்களை இலங்கை அரசு அமெரிக்காவுக்கு கொடுக்கும் பட்சத்தில் விஸ்வநாதன் உருத்திரகுமாரனின் கைது இருநாடுகளின் நீதி, சட்டம், மற்றும் ஒழுங்கு அமூலாக்கம் சம்பந்தப்பட்டதாக இருக்குமெனவும், இவை மிகச் சிரமமான பணிகளெனவும் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

நன்றி தமிழ் அலை