Friday, November 02, 2007

சுப. தமிழ்ச்செல்வன் வீரமரணம்


சுப. தமிழ்ச்செல்வன் வீரமரணம்


தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் சுப. தமிழ்ச்செல்வன் அவர்கள் கொல்லப்பட்ட செய்தி அதிர்ச்சியும் வேதனையும் தருவதாக உள்ளது. அரசியல் பிரிவில் இருப்பவர்களைக் கூட கொன்று குவிக்கும் இலங்கை அரசின் வெறித்தனம் கடும் கண்டனத்திற்குரியது.

தமிழ்ச்செல்வனின் படுகொலை இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் மனசாட்சியைத் தட்டி எழுப்பும் என்று நம்புகின்றோம். அய்க்கிய நாடுகள் அவையும் அனைத்துலக நாடுகளும் இதனைக் கண்டனம் செய்வதோடு ராசபக்சே அரசின் கொடூரங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறோம்.

சுப.வீரபாண்டியன் பொதுச் செயலாளர்
திராவிட இயக்கத் தமிழர் பேரவை