Tuesday, September 27, 2016

ஈரோடு - சென்னை - ஈரோடு பகல் நேர சிறப்பு ரயில்

சேலம், ஈரோடு செல்ல ரயில் மற்றும் பேருந்துகளில் இடம் கிடைக்காமல் தொல்லை படுபவர்களுக்கு ஒரு நற்செய்தியாக பகல் நேர ரயில் அறிவிப்பு வந்துள்ளது.
சேலத்தில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் விருத்தாசலம் மார்க்கமாக புதிய ரயில் இயக்க வேண்டும் என நீண்ட நாட்களாக பயணிகள் கோரிக்கை நனவாகி உள்ளது.
சென்னை எழும்பூர் -
ஈரோடு சிறப்பு ரயில் (06028) பிற்பகல் 3 மணிக்கு எழும்பூரில் புறப்படுகிறது


ஈரோடு - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் (06027) அதிகாலை 4.45 மணிக்கு ஈரோட்டில் புறப்படுகிறது


இந்த சிறப்பு ரயில், வரும் 25, 26, 27, 28, 29, 30, அக்டோபர் 2, 3, 4, 5, 7, 9, 10, 11, 12, 14ம் தேதிகளில் இயக்கப்படுகிறது. பயணிகளிடம் கிடைக்கும் வரவேற்பைபொருத்து, இயக்க நீட்டிப்பு வழங்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த ரயிலில் எப்போது இடம் கிடைக்கிறது, சேலம், ஈரோடு, நாமக்கல் பகுதியை சேர்ந்த நண்பர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும்