Monday, October 05, 2015

லாரி ஸ்டிரைக் வாபஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மத்திய அமைச்சர் நிதின்கட்கரியுடன் புதுடெல்லியில் அக்டோபர் 5ஆம் தேதி மாலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதால், லாரி ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டது.

சுங்கச்சாவடிகளை நீக்கினால், சுங்க கட்டணத்தை எப்படி கட்டுவது என்பது குறித்து முடிவு செய்ய, மத்திய அரசு சார்பில் இரு உறுப்பினர்களும் மோட்டார் காங்கிரஸ் சார்பில் இரு உறுப்பினர்களும் நியமிப்பது என தீர்மானிக்கப்பட்டது. டிசம்பர்
15 ம் தேதிக்குள் பிரச்சினைக்கு முடிவு காண்பது என இந்த கூட்டத்தில் உடன்பாடு எட்டப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தொழில் அதிபர் மகன் காரில் கடத்தல்: 6 பேர் கைது

காதலியை கேடயமாக வைத்து ரூ.5கோடி கேட்டு தொழில் அதிபர் மகன் காரில் கடத்தல்: 6 பேர் கைது