Thursday, September 17, 2015

மெரினா கடற்கரையில் பாராசூட் பயணம்

சென்னையின் புதிய சுற்றுலாவாக மாறியுள்ளது பாராசூட்

சயிலிங். மெரினா கடற்கரையில் வானத்தில் பறக்கும் பாராசூட்

பயணம் பொதுமக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.


சென்னை மெரினா கடற்கரையில் தினமும் மாலை 3 மணி

முதல் 6 மணி வரை பாரா சயிலிங் நடத்தப்படுகிறது. ஜுப்பில்

கட்டப்பட்ட பாராசூட்டில் பொது மக்கள் ஏற்றப்பட்டு வானத்தில்

பறக்கின்றனர். சென்னையில் முதன் முதலாக இந்த பாராசூட்

சாகச விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு

மாத காலமாக சென்னை மெரினா கடற்கரையில் இந்த பாராசூட்

சாகச பயணம் நடைபெற்று வருகிறது. இது சென்னையில்

தற்போது புதிய சுற்றுலாவாக உருவாகியுள்ளது. ஆர்வத்துடன்

பலர் இதில் பயணிக்கின்றனர்.


தமிழக சுற்றுலாத்துறை , சென்னை வான்வெளி கிளப் மற்றும்

கோயம்புத்தூரைச் சேர்ந்த இந்திய வான்வெளி விளையாட்டு

மற்றும் அறிவியல் மையம் இணைந்து இந்த பாரா சயிலிங்

பயணத்தை வழங்கி வருகிறது. இந்த பாராசூட்டில் பயணிக்க

பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு 300 ரூபாயும், பெரியவர்களுக்கு

500 ரூபாயும் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த

பாராசூட் பயணத்தை 6 வயது முதல்  யார் வேண்டுமானாலும்

செய்யலாம். இந்த பாராசூட் பயணத்திற்கு முன் பயிற்சி

அவசியமில்லை என்று கூறப்படுகிறது. பாராசூட்டின் நுனி

ஜுப்பில் பாதுகாப்பாக கட்டப்படுகிறது. பாராசூட்டில் பயணிப்பவர்

பாராசூட்டுடன் கட்டப்படுகிறார். பாதுகாப்பிற்க்கு ஹெல்மெட்

வழங்கப்படுகிறது. இதனால் பயணிப்பவருக்கு எந்த பாதிப்பும்

இல்லை. ஜுப் வேகமாக இழுக்கும் போது பாராசூட் மேலே

செல்கிறது. அப்போது பாராசூட்டில் பயணிப்பவர்  மெரினா

கடற்கரையின் அழகை வானத்தில் பறந்த படி ரசிக்கலாம்.

கடலின் அழகையும் ரசிக்கலாம்.

இதேபோல கடலில் பறக்கும் பாராசூட்டும் விரைவில் மெரினா

கடலில் அறிமுகப்படுத்தப்படுகிறது.  தமிழக மாணவர்களுக்கு

வான்வெளி விளையாட்டுகளை அறிமுகப்படுத்த வேண்டும்

என்ற அப்துல் கலாமின் கனவை நினைவாக்கும் வகையில் இந்த

பாராசூட் விளையாட்டு சாகசம் தொடங்கப்பட்டுள்ளது. 

No comments: