Friday, December 11, 2015

செந்தூரன் உயிர் அர்ப்பணிப்பு

கல்வியிலும், பழக்க வழக்கங்களிலும் ஆசிரியர்களே போற்றும் நல்ல மாணவனாக திகழ்ந்த ராஜேஸ்வரன் செந்தூரன் அவர்களின் அகால மரணச் செய்தி எம்மை மிகுந்த வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

அமைதியான குணாதிசயமுடைய செந்தூரன் அவர்கள், திடீரென ஒரு அரசியல் கோரிக்கையை முன்வைத்து தற்கொலை செய்திருப்பதை எண்ணிப்பார்க்கும்போது, பெருமையாக தமிழ் மக்கள் கருதுவார்கள்.

ஆனால் ஒரு கோரிக்கைக்காக உயிரை பலியிடும் முடிவானது அவரது பெற்றோருக்கும், கல்விச் சமூகத்திற்கும், நண்பர்களுக்கும், மக்களை நேசிக்கும் எமக்கும் பேரிழப்பையே ஏற்படுத்தியுள்ளது.


செந்தூரனுக்காக கவலை கொள்ளும் அதேவேளை அதை ஒரு முன்னுதாரணமாக எதிர்காலத்தில் எவரும் பின்பற்றி, எமது இனம் இழந்த இழப்புக்களை தொடர்கதையாக்கிவிடக் கூடாது. தமிழர்களாகிய நாம் இழந்த உயிர்கள் போதும். இனியும் நாம் உயிர்களை இழக்கத் தயாரில்லை. எமது உரிமையையும், விடுதலையையும், நடைமுறைச்சாத்தியமான வழிமுறையில் வென்றெடுக்க உறுதியெடுத்து செந்தூரனுக்கு இறுதி மரியாதை செய்வோம்.

No comments: