Tuesday, September 15, 2015

தேர்தலில் தனித்து போட்டி - சீமான்

தமிழக சட்டமன்ற தேர்தல் எங்களுக்கு ஒரு போர் - வரும் தேர்தலில் தனித்து போட்டி : நாம் தமிழர் கட்சியின் ஒருகினைப்பாளர் சீமான் பேட்டி


விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பில் மாயோன் பெருவிழாவாக செஞ்சி கோட்டை மீட்பு போர் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பணம் உள்ளவர்கள் தான் அரசியல் செய்ய முடியும் என்ற நிலையை உருவாக்கியுளார்கள். பணத்தை கொடுத்து வாக்கை பறிக்கும் இழிவு நிலை உருவாகியுள்ளது, திராவிட கட்சிகளை அப்புறபடுத்த ஒரு புரட்சி , ஒரு போரால் தான் முடியும். முதலிட்டாளர்கள் மாநாட்டில் லாப தேவைக்கு தான், மக்கள் சேவைக்கு அல்ல. தமிழ்நாடு முதலிடு செய்வதற்கு ஏதுவாக நாடாக உள்ளது என்றால் அது தலைவன் இல்லாத நாடாக உள்ளது என்று அர்த்தம். இது எல்லாம் ஏமாற்று, இதை நாங்கள் மாற்ற துடிக்கிறோம். வரும் தேர்தலில் தனித்து போட்டி, தமிழகத்தில் ஊழல், பஞ்சம், பட்டினி, லஞ்சம், அடக்குமுறை, கல்வி . மருத்துவம் இலவசம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், அது அரசின் கடமை, மற்ற இலவசங்கள் தேவை இல்லை, மதுவிலக்கு என்பது சாதாரண வேலை, மதுவை ஒழிக்கணும் என்று நினைக்கணும், அதிகாரம் கைக்கு வந்தால் அரை நொடி வேலை, ஒரே நாளில் மூட வேண்டும் என்று இந்த அரசிடம் சொல்லவில்லை, 44 ஆண்டுகள் எங்களை குடிக்கவைதிர்கள், காமராஜர் என்ற பெரும் தலைவர் எங்களை பள்ளி திறந்து படிக்க வைத்தார், திராவிட அரசியல் கட்சிகள் மது கடையை திறந்து குடிக்க வைத்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக மூடுங்கள். ஆனால் அரசுக்கு மதுவை ஒழிக்கும் அக்கறை இல்லை.

இங்கு செஞ்சியில் கூட்டம் நடத்தவதற்கான காரணம் குறித்து பேசிய சீமான், செஞ்சி கோட்டை ராஜா தேசிங்கு கோட்டை என வரலாற்றில் படிக்கப்படுகிறது, ஆனால் அது இல்லை, எங்கள் முன்னோர்கள் ஆனந்த கோன் வழியாக வந்தவர்கள் கட்டிய கோட்டை, இது வரலாற்றில் மறைக்கப்பட்டுள்ளது, வெளியில் இருந்து வந்த தேசிங்கு கோட்டை என்று அழைப்பது எங்களுக்கு அவமானம், அதனால் எங்கள் முன்னோரின் பெயரை நிறுவ வேண்டும் என்றும் கோனேறிக்கோன் கோட்டை என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி செஞ்சி கோட்டை மீட்பு போர் நடத்த உள்ளதாக கூறினார்.  முதிலில் கோனேறிக்கோன் கோட்டை என பெயர் அறிவிப்பு செய்வோம், இனிமேல் கோனேறிக்கோன் கோட்டை என அறிவிப்பு பலகை வைப்போம், பின்னர் அந்த பெயரை வெளியில் சொல்லி வருவோம் என சீமான் தெரிவித்தார்.

No comments: