Wednesday, September 17, 2008

பெரியார் 130


பெரியார்
130 ஆவது பிறந்த நாள்


விளக்கை ஏற்றி
வெளிச்சம் தந்தவர்கள் உண்டு
நீயோ
உன்னையே எரித்து
வெளிச்சம் தந்தாய்

எங்களுக்கு நீதான்
எழுதவும் படிக்கவும்
அடித்தளமிட்டாய்
நாங்களோ இன்னும்
நன்றி சொல்லவே
கற்றுக்கொள்ளவில்லை

எங்களுக்காகவே
நீ வாழ்ந்தாய்
மன்னித்துவிடு
தந்தையே
நாங்களும்
எங்களுக்காகவே வாழ்ந்து
கொண்டிருக்கிறோம்.

- சுபவீ.
(தென்செய்தி 1/15 அக்டோபர் 2004

No comments: