Wednesday, February 24, 2016

பாபா அணு ஆராய்ச்சி மையத்திற்கு புதிய இயக்குநர்

பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் அணு உலைத் திட்டக் குழுவின் இணை இயக்குநரும் பிரபல விஞ்ஞானியுமான திரு. கே. என் வியாஸ் இன்று மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக பொறுப்பேற்றுக் கொண்டார். மத்திய அரசின் அணுசக்தித் துறை செயலாளரும் அணுசக்தி ஆணையத்தின் தலைவருமான டாக்டர் சேகர் பாசுவிடமிருந்து இந்தப் பொறுப்பை அவர் பெற்றுக் கொண்டார்.
வியாஸ் பாபா அணு ஆராய்ச்சி மைய பயிற்சிப் பள்ளியின் 22 -வது குழு பட்டதாரி ஆவார். பின்னர் அவர் இந்த மையத்தின் அணு உலைப் பொறியியல் துறையின் எரிபொருள் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு பிரிவில் பணியில் சேர்ந்தார். கடந்த 36 ஆண்டுகளில் திரு. வியாஸ் அணு உலை எரிபொருள் வடிவமைப்பு மற்றும் பகுப்பாய்வில் நீண்ட அனுபவத்தைப் பெற்றார். அதனை அடுத்து அணு உலை திட்டப் பிரிவின் தலைவராக அணு உலை அமைப்பு முறைகளின் வடிவமைப்பு மற்றும் பகுப்பாய்வு அனுபவத்தையும் அவர் பெற்றுள்ளார்.

No comments: