Saturday, April 16, 2016

வாய்க்காலில் மூழ்கி மளிகை வியாபாரி– மனைவி–மகள் உள்பட 4 பேர் பலி

கோபி அருகே வாய்க்காலில் மூழ்கி மளிகை வியாபாரி– மனைவி–மகள் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.
கோபி அருகே வாய்க்காலில் மூழ்கி மளிகை வியாபாரி– மனைவி–மகள் உள்பட 4 பேர் பலி
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த கடத்தூர் குடக்கரையை பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 42). மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி வேதவள்ளி (40). இவர்களது மகள் பவித்ரா (15).
இந்த நிலையில் குடக்கரையை அடுத்த சலசலப்பு என்ற இடத்தில் கீழ்பவானி வாய்க்காலுக்கு சரவணகுமார், அவரது மனைரி வேதவள்ளி , மகள் பவித்ரா மற்றும் வேதவள்ளியின் தங்கை மகள் நர்மதா ஆகிய 4 பேரும் இன்று குளிக்க சென்றனர்.
தற்போது பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கீழ்பவானி வாய்க்காலில் இரு கரைகளையும் தொட்டப்படி தண்ணீர் நிரம்பி செல்கிறது.
இந்த நிலையில் சரவணகுமார், வேதவள்ளி ஆகியோர் வாய்க்காலில் துணிகளை துவைத்து கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென பவித்ரா, நர்மதா ஆகியோரை தண்ணீர் அடித்து சென்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த சரவணகுமார், வேதவள்ளி ஆகியோர் விரைந்து வாய்க்காலில் குதித்து 2 பேரையும் காப்பாற்ற முயன்றனர்.
ஆனால் பவித்ரா, நர்மதா ஆகியோர் தண்ணீரில் மூழ்கி அடித்து செல்லப்பட்டனர். இதேபோல் காப்பாற்ற சென்ற கணவன்–மனைவி இருவரையும் தண்ணீர் இழுத்து சென்றது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் தண்ணீரில் மூழ்கி பலியாகி விட்டனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் கடத்தூர் போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர் காந்திமதி விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.
மேலும் கோபி தீயணைப்பு நிலைய வீரர்களும் விரைந்து வந்து தண்ணீரில் மூழ்கி பலியான சரவணகுமார், வேதவள்ளி , பவித்ரா, நர்மதா ஆகிய 4 பேரின் உடல்களையும் தேடி வருகிறார்கள்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வாய்க்காலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments: