Monday, February 08, 2016

இருவிதமான விலையில் இணைய சேவை: டிராய் மறுப்பு - பேஸ்புக்கிற்கு பின்னடைவு..

தொலைத்தொடர்பு நிறுவனங்கள், புதிய கட்டணங்களை அறிவிக்கும் முன் டிராயிடம் ஒப்புதல் வாங்க வேண்டும் என்று தொலைத்தொடர்பு வழிகாட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கும் சேவைக்கு நிர்ணயம் செய்யும் கட்டணங்கள் குறித்து தொலைத்தொடர்பு வழிகாட்டு ஆணையமான டிராய் புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. இதன்படி, பயன்படுத்தப்படும் இணையதளங்களுக்கு தகுந்தாற் போல், மாறுபட்ட கட்டணங்களை வசூலிக்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

FREE BASICS என்ற அடிப்படையில், சில தொலைத்தொடர்பு நிறுவனங்கள் FACEBOOK  இணையதளத்தை இலவசமாக பயன்படுத்தும் முறையை அறிமுகம் செய்தது. இது போன்ற பாரபட்சம் இருக்க கூடாது என்பதற்காகவே இந்த நடைமுறையை டிராய் அறிவித்துள்ளது.

No comments: