Thursday, December 31, 2009

மூடநம்பிக்கையின் முடைநாற்றம்

செத்துப் போன குரங்குக்கு சிவப்புத் துணி மரியாதையாம்!கம்யூனிஸ்ட் அமைச்சரின் கடவுள் பாசம்
திருவனந்தபுரம், டிச. 30_- கோயிலில் வாழ்ந்து செத்துப் போன குரங்கு ஒன்றுக்கு சிவப்புத்துணி போர்த்தி, இறுதி மரியாதை செலுத்தி தனது இந்துக் கடவுள் பாசத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் கேரளாவின் நீர்வளத்துறை அமைச்சர் என்.கே பிரேமச்சந்திரன்.
கேராளாவில் சாஸ்தம்கோட்டா என்ற இடத்தில் உள்ளது தரும சாஸ்தா கோயில். இங்கு ஏராளமான குரங்குகள் கூட்டம் கூட்டமாக வசித்து வருகின்றன. இதனால் இங்கு வரும் பக்தர்கள் பல்வேறு சிரமங்களுக்கும் உள்ளாகின்றனர். கோயிலுக்கு அருகில் உள்ள வீடுகளுக்குள்ளும் குரங்கு--கள் கூட்டம் கூட்டமாக படை எடுத்து பல்வேறு தொல்லைகள் கொடுத்து வந்தன. இதுகுறித்து 1980களில் அப்பகுதி மக்கள் கேரள உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இதனை அடுத்து அங்குள்ள குரங்குகளை உடனடி-யாக அப்-புறப்-படுத்துமாறு உயர்நீதிமன்றம் உத்தர-விட்டது. ஒரே ஒரு குரங்கைத் தவிர அனைத்துக் குரங்குகளும் அப்போது அங்கிருந்து வெளி-யேற்றப்-பட்டன. அந்த ஒரே ஒரு குரங்கு மட்டும் யாருக்கும் எவ்விதக் கெடுதலும் செய்யாமல் இருந்ததாம். பக்தர்களுக்கு தொல்லை கொடுக்கும் மற்ற குரங்குகளுடன், இந்தக் குரங்கு மட்டும் சண்டை போட்டு பக்தர்களை தொல்லையிலிருந்து தடுத்து வந்ததாம். இதனால் பக்தர்கள் மத்தியில் அந்தக் குரங்குக்கு மதிப்பும், மரியாதையும் அதிகரித்ததாம். இதனால் அந்தக் குரங்குக்கு சாயிப்பு என்று பெயரிட்டு பக்தர்கள் அழைத்து வந்தாக கூறப்-படுகிறது. அக்கோயில் உள்ள குரங்கு கூட்டத்துக்கு சாயிப்பு-தான் தலைவரைப் போல் செயல்பட்டு வந்ததாம்.
சமீபத்தில் அந்தக் குரங்கை மற்ற சில குரங்குகள் சண்டையிட்டு கடித்துக் குதறியதால் படுகாயமடைந்த சாயிப்பு குரங்கு பெரும் அவதிப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முன் தினம் அந்தக் குரங்கு இறந்து போனது.
சாயிப்பு-வின் சாவுச் செய்தி கேட்ட அப்பகுதி மக்கள் கோயிலில் கூடத் தொடங்கினர். கேரள மாநிலத்தின் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பிரேமச்சந்திரன், கொல்லம் மாவட்டம் குன்னாத்தூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் கோவூர் குஞ்சுமோன் ஆகியோரும் அங்கு விரைந்து வந்தனர். செத்துப் போன குரங்குவின் உடலுக்கு செங்கொடி போர்த்தி கேரளாவின் கம்யூனிஸ்ட் அமைச்சரும், அதே கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.-வும் இறுதி மரியாதை செலுத்தினாராம். இதிகாச ராமனுக்கு, அனுமான் குரங்கு உதவி செய்ததாகக் கூறி அதனை ஒட்டி பல்வேறு புளுகு மூட்டை-களையும் அவிழ்த்து வருகிறது இந்துத்-துவா கூட்டம். அதற்கு ஆமாம் சாமி போடும் விதமாக மார்க்சியத் தோழர்களும், செத்துப் போன குரங்குக்கு செங்கொடி போர்த்தி இந்துக் கடவுள் பாசத்தை வெளிப்படுத்தி இருப்பதை என்னவென்று சொல்வது? மார்க்சியம் அவர்களுக்கு கற்றுக் கொடுத்-தது இந்த இந்து மத நம்பிக்-கையைத்-தானா?

No comments: