Thursday, November 27, 2008

தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரையை நேரலையில் கேட்க

அனைத்துலக சமூகத்தின் எதிர்பார்ப்புக்களை பெருமளவுக்கு ஏற்படுத்தியிருக்கும் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் மாவீரர் நாள் உரை இன்று மாலை இடம்பெறவுள்ளது.

மாவீரர் வாரத்தின் இறுதி நாளான இன்று வியாழக்கிழமை இடம்பெறப்போகும் இந்த உரையில் தலைவர் பிரபாகரன் என்ன சொல்லப் போகின்றார் என்பதை தாயகத்தில் வாழும் தமிழர்கள் மட்டுமன்றி, தமிழக தமிழர்கள், புலம்பெயர்ந்த தமிழர்கள் மற்றும் அனைத்துலக சமூகமும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றது.

தாயக மண் விடுதலைக்காக தம்முயிர்களை ஈகம் செய்த மாவீரர்கள் அனைவரையும் போற்றும் மாவீரர் நாள் உரையை தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் இன்று வியாழக்கிழமை நிகழ்த்தவுள்ளார்.

தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள்

தாயக மற்றும் தமிழக நேரம் பிற்பகல் 5:40 நிமிடத்துக்கும்

அவுஸ்திரேலிய சிட்னி, மெல்பேர்ண் நேரம் இரவு 11:10 நிமிடத்துக்கும்

நியூசிலாந்து நேரம் அதிகாலை 2:10 நிமிடத்துக்கும்

கனடாவின் ரொறன்ரோ நேரம் காலை 7:10 நிமிடத்துக்கும்

ஐரோப்பிய நேரம் பிற்பகல் 1:10 நிமிடத்துக்கும்

பிரித்தானிய நேரம் பிற்பகல் 12:10 நிமிடத்துக்கும்

சிங்கப்பூர், மலேசிய நேரம் இரவு 8:10 நிமிடத்துக்கும்

மாவீரர் நாள் உரையை நிகழ்த்தவுள்ளார்.

வானொலி மற்றும் தொலைக்காட்சியின் இணையத்தளங்கள் வருமாறு:

புலிகளின் குரல் வானொலி - www.pulikalinkural.com

லண்டன் ஐபிசி வானொலி - www.ibctamil.co.uk

கனடிய தமிழ் வானொலி - www.ctr24.com

ஐரோப்பிய தமிழ் வானொலி - www.tamilfm.eu

அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் - www.atbc.net.au

ரிவிஐ - www.tviondemand.com

ஐரோப்பிய தொலைக்காட்சி - www.eurotvlive.com

வளரி தொலைக்காட்சி - www.valary.tv


நன்றி /

புதினம்






No comments: