Thursday, November 06, 2008

வடமராட்சியில் காவியமான கடற்கரும்புலிகளின் வீரவணக்க நிகழ்வு

வடமராட்சியில் காவியமான ஏழு கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நிகழ்வு
வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படை கொமாண்டோக்கள் மீது தாக்குதல் நடத்தி- இரண்டு படகுகளை மூழ்கடித்து- 20 படையினரை கொன்று வீரவரலாறான கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நிகழ்வு மூங்கிலாறில் நடைபெற்றது.

மட்டக்களப்பு - அம்பாறை மாவீரர் மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை உடையார்கட்டு கோட்டப் பொறுப்பாளர் ஞானவேல் தலைமையில் வீரவணக்க கூட்டம் இடம்பெற்றது.


படம்: தமிழீழ தேசிய தொலைக்காட்சி


படம்: தமிழீழ தேசிய தொலைக்காட்சி


படம்: தமிழீழ தேசிய தொலைக்காட்சி

நிகழ்வில் வீரவரலாறான

கடற்கரும்புலி லெப். கேணல் பதுமன்

கடற்கரும்புலி லெப். கேணல் புலிக்குட்டி

கடற்கரும்புலி லெப். கேணல் கண்ணன்

கடற்கரும்புலி மேஜர் செந்தூரன்

கடற்கரும்புலி மேஜர் கலைமதி

கடற்கரும்புலி கப்டன் கொள்கைக்கோன்

கடற்கரும்புலி கப்டன் அகச்சேரன்

ஆகிய கரும்புலி மாவீரர்களில் இருவரின் வித்துடல்கள் ஏனையோரின் திருவுருவப்படங்களுக்கு ஈகச்சுடர்களை பெற்றோர், உறவினர்கள் ஏற்றினர்.


படம்: தமிழீழ தேசிய தொலைக்காட்சி


படம்: தமிழீழ தேசிய தொலைக்காட்சி


படம்: தமிழீழ தேசிய தொலைக்காட்சி

தொடர்ந்து பெற்றோர், உறவினர்கள், தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகள் எனப் பலரும் மலர்மாலைகளை சூட்டினர்.

வீரவணக்கவுரையை கடற்புலிகளின் சிறப்புத்தளபதி கேணல் சூசை நிகழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து மலர்வணக்கம் நடைபெற்றது.

தொடர்ந்து விசுவமடு மாவீரர் துயிலுமில்லத்தில் முழுப்படைய மதிப்புடன் வித்துடல்கள் விதைக்கப்பட்டன.

நடுகற்கள் திரைநீக்கம் செய்யப்பட்டன.

No comments: