Saturday, October 25, 2008

கொட்டும் மழையில் லட்சக்கணக்கில் திரண்ட தமிழக உறவுகளின் "மனித சங்கிலி அணிவகுப்பு"




சிங்களப் பேரினவாதத்தால் இலங்கைத் தீவில் தமிழ் உறவுகள் இனப் படுகொலைக்குள்ளாக்கப்படுவதைக் கண்டித்து தமிழ்நாட்டுத் தலைநகர் சென்னையில் கொட்டும் மழையில் லட்சக்கணக்கான தமிழக உறவுகள் மனித சங்கிலியாக அணிதிரண்டு தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தினர்.

வடசென்னை பகுதியில் தமிழ்நாடு நிதியமைச்சரும் தி.மு.க.வின் பொதுச்செயலாளருமான பேராசிரியர் அன்பழகன் தலைமையில் தொடங்கிய இந்த மனித சங்கிலி அணிவகுப்பு முழுமையாக சென்னை நகரைக் கடந்து புறநகர் சென்னைப் பகுதிகளையும் கடந்து செங்கல்பட்டு மாவட்டத்தைத் தொட்டு நின்றது.

மனித சங்கிலி அணிவகுப்பு தொடங்கிய நேரத்தில் கனமழை கொட்டியது.





இயற்கையும் வடித்த கண்ணீரை தம் தேகங்களில் தாங்கிய தமிழ்நாட்டு உறவுகள்-

'இந்திய அரசே! ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடு"!

'ஈழத் தமிழர்களைக் காப்பாற்று"

என்பது உள்ளிட்ட முழக்கங்களையும்

ஈழத் தமிழர்கள் மீதான சிங்களத்தின் இனப்படுகொலைகளைச் சித்தரிக்கும் வகையிலான புகைப்படங்கள்- பதாகைகளை ஏந்தியும் கொட்டும் மழையில் உணர்வெழுச்சியாகத் திரண்டிருந்தனர்.





தமிழ்நாடு முதல்வர் கலைஞரின் குடும்பத்தினரும் இந்த உணர்வெழுச்சியான அணிவகுப்பில் பங்கேற்றிருந்தனர்.

பாட்டாளி மக்கள் கட்சி- இடதுசாரிக் கட்சிகள்- விடுதலைச் சிறுத்தைகள்- திராவிடர் கழகம்- தமிழ்த் திரை உலகத்தினர் மற்றும் பல்வேறு இயக்கங்களின் தலைவர்கள்- பொதுமக்கள் இந்த அணிவகுப்பில் திரண்டனர்.

நன்றி / புதினம்

மனித சங்கிலி அணிவகுப்பை முதுமையும் பாராது கொட்டும் மழையில் தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதி பார்வையிட்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டே சென்றார்.











No comments: