Tuesday, November 27, 2007

தமிழீழ மாவீரர் நாள் நிகழ்வுகள்


தமிழீழ மாவீரர் நாள் நிகழ்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரப்பூர்வ வானொலியான புலிகளின் குரலின் இணையத்தள ஒலிபரப்பின் மூலமும் நேரடியாக ஒலிபரப்புச் செய்யப்படவுள்ளது.

www.pulikalinkural.com என்ற இணையத்தள முகவரி ஊடாக இந்த ஒலிபரப்பு நேரடியாக நாளை செவ்வாய்க்கிழமை அதிகாலை காலை 5.30 மணிக்கு ஒலிபரப்பு தொடங்குகின்றது.

நிகழ்ச்சிகள், செய்திகள், அறிவித்தல்கள், மாவீரர் துயிலுமில்லங்களின் செயற்பாடுகள், மக்களின் நகர்வுகள் பற்றிய விடயங்கள் இதில் இடம்பெறும்.

மாலை 5:34 நிமிடத்துக்கு தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் மாவீரர் நாள் உரையை நிகழ்த்தவுள்ளார்.

தாயக விடுதலைத் தாகத்துடன் தங்கள் இன்னுயிர்களை உவப்பீகை செய்த மாவீரர்கள் அனைவரையும் தமிழினம் ஒன்றுசேரப் போற்றித்தொழும் புனித வேளை 6:05 மணிக்கு தொடங்குகின்றது.

முதலில் மாவீரர் நினைவாக மணியொலி எழுப்பப்படவுள்ளது. 6:06 மணிக்கு மாவீரர்களை ஒன்றுசேரப் போற்றி மக்கள் அகவணக்கம் செலுத்துவர்.

6:07 மணிக்கு தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் முதன்மைச்சுடரை ஏற்றுவார். அதேவேளையில் மாவீரர் துயிலுமில்லங்களில் தளபதிகள், பொறுப்பாளர்கள் முதன்மைச்சுடர்களை ஏற்றுவர்.

அதே நேரத்தில் விதைகுழிகள், நடுகற்கள் முன்பாக மாவீரர்களின் பெற்றோர், துணைவியர், பிள்ளைகள், உடன்பிறப்புக்கள் சுடர்களை ஏற்றுவர்.


அதேவேளை ஒழுங்கமைக்கப்பட்ட இடங்களில் மாவீரர் மண்டபங்களில் இல்லங்களில் சுடர்கள் ஏற்றப்படும்.

சிறிலங்காப் படை வல்வளைப்புப் பகுதிகளில் ஏற்ப இடங்களில் மற்றும் மக்களின் அகங்களில் மாவீரர்களுக்கு சுடர்களை ஏற்றுவர்.

இச்சுடர்களின் ஒளிவெள்ளத்தில் மாவீரர்களின் ஈகம் தோன்றும். இந்த ஒளிவெள்ளத்தில் மாவீரர்களின் நினைவுகளில் மக்கள் ஒன்றிப்பர்.

No comments: